Villupuram

News August 22, 2024

ரூ.400 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

image

திண்டிவனத்தில் உள்ள SIPCOT உணவுப் பூங்காவில் டாபர் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையை ரூ. 400 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்க உள்ளது. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

News August 22, 2024

விழுப்புரத்தில் விடுப்பு எடுத்து போராட்டம்

image

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த அலுவலகர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பணிகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News August 22, 2024

சென்னகுணத்தில் எம்.பி. திறந்து வைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் சென்னகுணத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட நாடக மேடையை இன்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விசிக மகளிரணி பொறுப்பாளர் அழகம்மாள், மாவட்டச் செயலாளர்கள் விடுதலைச்செல்வன், பெரியார் மற்றும் விசிக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

News August 22, 2024

திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 

image

திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர்,
பாலியல் குற்றங்கள் தடுக்க அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், அதிகாரிகளும் முனைப்பு காட்ட வேண்டும் என்றும்,  கிருஷ்ணகிரியில் போலி என் சி சி முகாம் நடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News August 22, 2024

விழுப்புரம் மாவட்ட மழை நிலவரம்   

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று லேசான மழை பெய்தது. நேற்று வானம் மேகம் மூட்டமாக காணப்பட்ட நிலையில் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. நேற்று குறிப்பாக விழுப்புரம்-03 மிமீ, வளவனூர்- 08மிமீ, கோலியனூர்-07 மிமீ, வளத்தி-04 மிமீ ஆகிய பகுதிகளில் மழை அளவு பதிவாகியுள்ளது. திண்டிவனம், கெடார்,முண்டியம்பாக்கம், திருவெண்ணைநல்லூர், அனந்தபுரம்,முகையூர், மனம்பூண்டி, செஞ்சி, மரக்காணம் போன்ற பகுதியில் மழை இல்லை.

News August 22, 2024

விழுப்புரம் அருகே 20 கடைகளுக்கு சீல்

image

வளவனூர் பேரூராட்சி மூலம் 103 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக 70 சதவிகித வாடகை வசூலாகாமல் இருந்தது . சுமார் 80 லட்சம் வரை வாடகை வசூலாகாமல் இருந்தது.பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை தரவில்லை. இந்நிலையில் பேரூராட்சி அதிகாரிகள் நேற்று வாடகை பாக்கி தராத 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். 10 நாட்களுக்குள் வாடகை செலுத்தாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர் .

News August 22, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (21.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 21, 2024

காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர் கூட்டம்

image

விழுப்புரத்தில் மத்திய, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தலைவர் கு.செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார். விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் R.T.V. சீனிவாச குமார், வடக்கு மாவட்ட தலைவர் R.P. ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், டாக்டர் எம். கே.விஷ்ணு பிரசாத் உட்பட பலர் இருந்தனர்.

News August 21, 2024

லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது

image

திருவெண்ணைநல்லூரில் சேட்டு என்பவரிடம் வீட்டுமனை பதிவிற்கு தடையின்மை சான்றிதழ் வழங்க, இன்று அவரிடம் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை தி.வெ.நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் வாங்கியுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 21, 2024

விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!