India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர் விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், தி.மலை ஆகிய ஊர்களுக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று 165 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், கோயம்பேட்டில் இருந்து வேலூர், ஓசூர், புதுச்சேரி ECR வழி, தி.மலைக்கு ஆற்காடு, ஆரணி, காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இன்று 40 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
விழுப்புரத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் மன்றம் அமைப்பது தொடர்பாகவும், வரும் 31-ஆம் தேதி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் பகுதியில் சென்னை- திருச்சி சாலையில் பல திருமண மண்டபங்களில் இன்று பல்வேறு விசேஷங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசேஷத்திற்கு செல்பவர்கள் வெளியே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (23.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் மதுவிலக்கு பிரிவின் துணை கண்காணிப்பாளராக டி . கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார் . விழுப்புரம் மாவட்டத்தின் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவின் துணை கண்காணிப்பாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வார இறுதி நாட்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் கூறியுள்ளதாவது: விழுப்புரம் கோட்டம் சாா்பில் இன்றிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இன்றும்,நாளையும் சேர்த்து மொத்தம் 330 சிறப்புப் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படவுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் டோல் பூத் அருகே பணியிலிருந்த ஊழியர் மீது லாரி மோதிய விபத்தில் ஊழியர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விக்கிரவாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் துணை நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கப்படும் மின் பாதைகளில் இன்று மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்படுகிறது. எனவே, இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் சீரான மின்வினியோகம் இருக்கும் என்று விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் துணை நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கப்படும் மின் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. எனவே நாளை (23.08.2024) வெள்ளிக்கிழமை வழக்கம் போல் சீரான மின்வினியோகம் இருக்கும் என்று விழுப்புரம் செயற்பொறியாளர் வினியோகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (22.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.