Villupuram

News August 26, 2024

தேர்வு நடத்த கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

image

தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை தயாரித்து வழங்குவதற்கான ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகள் 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 26 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவண எழுத்தர் உரிமத் தேர்வை வயதுவரம்பு இல்லாமல் உடனடியாக அரசு நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

News August 26, 2024

சாலை விபத்தில் 5ஆம் வகுப்பு மாணவன் பலி

image

விக்கிரவாண்டி அடுத்த அசோகபுரி பகுதியைச் சோ்ந்தவா் கலையரசன். இவரது மகன் புவனேஸ்வரன் (10) நேற்று காலை தனது அத்தையுடன் விழுப்புரம்-செஞ்சி சாலையில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, விழுப்புரத்திலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற காா் இருவா் மீதும் மோதியது. இதில், புவனேஸ்வரன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். செல்வி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News August 26, 2024

விழுப்புரத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

விழுப்புரத்தில் நாளை (ஆக.27) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, விராட்டிக்குப்பம், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூா், மரகதபுரம், கப்பூா், பிடாகம், பிள்ளையாா்குப்பம், ஆனாங்கூா், கீழ்பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். <>மேலும் தகவல்களுக்கு<<>>

News August 26, 2024

விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் திருமண வரவேற்பு விழா

image

விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் சுருதன்ஜெய் நாராயணனின் திருமண வரவேற்பு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் ம.ஜெயச்சந்திரன், ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் RS. வாசன், கலைச்செல்வி, சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர்கள் சிவகுமார், அன்புமணி, ஒன்றிய குழு துணை தலைவர் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 25, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

விழுப்புரம், செஞ்சி, கோட்டகுப்பம் ஆகிய பகுதிகளில் இன்று (25.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 25, 2024

விழுப்புரம் அரசு கல்லூரியில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், சில காலியாக உள்ள இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அறிவியல் பிரிவில் விண்ணப்பித்தவர்களும், காலை 11.00 மணிக்கு கணிதம் பிரிவில் விண்ணப்பித்தவர்களும், 28ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கணிதம் பிரிவுக்கும், காலை 11.00 மணிக்கு B.A தமிழ் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

News August 25, 2024

10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு

image

விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகம், திண்டிவனம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும், பணம், நகை ஆகியவைகளை ஜன்னல் வழியாக வீசி விட்டு அலுவலர்கள் தப்ப முயன்றனர். அவர்களை பிடித்து சோதனை செய்து, ரூ.2.28 லட்சம், 4 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, 10 பேர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News August 24, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (24.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 24, 2024

விழுப்புரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது 

image

மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சாதி மதம் கடந்து சமத்துவத்தை போதிக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ‘நிகரி’ சமத்துவ ஆசிரியர் விருதுக்கு இந்தாண்டு விழுப்புரம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி திண்டிவனத்தில் நடைபெறும் விழாவில் முன்னாள் நீதிபதி சந்துரு கையால் விருதினைப் பெற உள்ளார்.

News August 24, 2024

திமுக நிர்வாகி தாயார் மறைவு: அமைச்சர் அஞ்சலி

image

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் வெள்ளிமேடுபேட்டையில், மாவட்ட அயலக அணி தலைவர் நூருல்லாவின் தாயார் உடல்நல குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதில், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர், முன்னாள் எம்எல்ஏ சேதுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

error: Content is protected !!