India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் நாளை (30.08.2024) காலை 9.00 மணி அளவில் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் (ம) கருவிகளின் செயல்பாடுகள் (ம) பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் சிறப்பு சலுகைகளுடன் விவசாயிகள் தங்களது சொந்த டிராக்டர் (ம) உபகரணங்களை இம்முகாமிற்கு கொண்டு வந்து பராமரிப்பு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ள அவர்களது எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, கோட்டகுப்பம் ஆகிய உட்கோட்ட அதிகாரிகள் செல்போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (30.08.2024) காலை 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் தென்கோடிப்பாக்கம் கிராமத்தில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் தனியார் கல்குவாரிகளால் நில அதிர்வு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவதாக அசோக் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் எஸ்.பி., தமிழக புவியியல் மற்றும் சுரங்க துறை ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ள தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்கப்படாவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வெகு நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் தொழிலாளர்கள் கலைந்தனர்.
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆக.30, 31) ஆகிய நாட்களில் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 30ஆம் தேதி 125 பேருந்துகளும், 31ஆம் தேதி 165 பேருந்துகளும் என 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பெரியாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி. இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண், கடந்த ஒரு வாரத்திற்கு முன் உடல்நிலை பாதித்து உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சஞ்சீவி, நேற்றிரவு தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் உட்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக ரவிந்திரகுமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர், புதிய ஏ.எஸ்.பி.,யாக பணி நியமனம் செய்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், ஐ.பி.எஸ்., முடித்த சென்னையைச் சேர்ந்த ரவிந்திரகுமார் குப்தா, விழுப்புரம் உட்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக இருந்த சுரேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் 31, செப்.2 ஆகிய தேதிகளில் விழுப்புரம் – திருச்சி சாலை ரயில்வே மேம்பாலப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பகல் 11.15 – 12.15 மணி வரையிலும், மாலை 4.15 – 5.15 மணி வரையிலும் விழுப்புரம்-புதுச்சேரி சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்படாது. மற்ற நேரங்களில் வழக்கம்போல இயங்க அனுமதிக்கப்படும்.
முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 04.09.2024 அன்று மாலை 5.00 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் ஆட்சியர் அறிவித்த்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.