India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழையளவு விபரம் வெளியிடப்பட்டுளள்து. விழுப்புரம் 3 மில்லி மீட்டர், திண்டிவனம் 12 மில்லி மீட்டர், மரக்காணம் 34 மில்லி மீட்டர், செஞ்சி 4 மில்லி மீட்டர், வல்லம் 7 மில்லி மீட்டர், அவலூர்பேட்டை 4 மில்லி மீட்டர், மணமுண்டி 16 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 16 மில்லி மீட்டர், வளத்தி 6 மில்லி மீட்டர். சராசரியாக 5.1 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் விழுப்புரம் வழித்தடத்தில் செல்கிறது. இந்நிலையில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று (ஆக.31) பிரதமர் மோடி காணெளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, இன்று விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும் வந்தே பாரத் ரயிலை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வரவேற்கவுள்ளார்.
நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும், தனுஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், 2016-ஆம் ஆண்டு நாகராஜனை, தனுஷ் மற்றும் அவரது தம்பிகள் சுரேஷ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (30.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் நாளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளின் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இதில், முதன்மை விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்கின்றனர். ஆரணி, காஞ்சிபுரம், திண்டிவனம், பண்ருட்டி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பொறியல் கல்லூரிகளின் சார்பில் சட்டக் கல்லூரியில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு கையெழுத்திட வேண்டுமென மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி உள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “எந்த கல்வி கொள்கையை திணித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்றும், இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சேதனை நடத்தி வருகின்றனர். லஞ்சம் பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு மற்றும் இதர சேவைகள் வழங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் விழுப்புரம் வழித்தடத்தில் செல்கிறது. இந்நிலையில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை நாளை (ஆக.31) பிரதமர் மோடி காணெளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதையடுத்து நாளை விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும் வந்தே பாரத் ரயிலை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வரவேற்கவுள்ளார். இதில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில், செஞ்சியிலுள்ள ஸ்ரீரங்கபூபதி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை காலை 10 மணிக்கு வேலைவாய்ய்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் இளைஞா்கள் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பைப் பெறலாம். இதில், 18 முதல் 40 வயதுடைய 8ஆம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவா்கள் பங்கேற்கலாம்.
பெண்களுக்கு, பாதுகாப்பான சமுதாயம் உருவாக்க வேண்டும் என விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா். “கருவிலிருக்கும் குழந்தை ஆண், பெண் என்பதைக் கண்டறிந்து, பெண் குழந்தையாக இருந்தால் கருவிலேயே கலைக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தைத் திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
Sorry, no posts matched your criteria.