India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மாவட்ட எஸ்.பி முடிவெடுப்பார் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்து, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் முடிவு மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்படும் எனக் கூறினார். மாநாடு நடக்கும் பகுதி விக்கிரவாண்டி டோல்கேட் அருகே உள்ளது. அங்கு சாதாரணமாகவே அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பது குருதிப்பிடத்தக்கது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கௌதமசிகாமணி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு மலரை நேற்று வழங்கினார். இதனை, மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர் செ.புஷ்பராஜ், மாநில மகளிர் அணி பிரச்சார குழுச் செயலாளர் எம்.தேன்மொழி, ஒன்றியச் செயலாளர்கள் கு.செல்வமணி, கிளியனூர் ராஜி, மைதிலி ராஜேந்திரன் ஆகியோருக்கு வழங்கினார்.
செஞ்சி தனியார் மண்டபத்தில் இன்று மாலை விழுப்புரம் சேம்பர் ஆப் காமாஸ் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மண்டப தலைவர் சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகின்ற சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஜீவானந்தம், நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் காலை துவங்கி இரவு வரை நடைபெற்றது. இதில், 90 லட்சத்து 95 ஆயிரத்து 958 ரூபாய் ரொக்கம், 148 கிராம் தங்கம், 1,150 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சக்கர ஆலை எல்லைக்குட்பட்ட தென்னவராயன்பட்டை சேர்ந்த முன்னோடி விவசாயி ராஜலட்சுமி மூர்த்தி, தனது நிலத்தில் கோ 86032 ராக கரும்பு சாகுபடி செய்திருந்தார். 2023-24 ஆண்டிற்கான தமிழக அளவிலான கரும்பு மகசூல் போட்டியில் ஏக்கருக்கு 117 டன் மகசூல் எடுத்து மாநிலத்தின் முதலிடம் பெற்றார். இதையடுத்து இவருக்கு நேற்று கரும்பு மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் நந்தகோபால் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் மீதான புகார்களின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் நந்தகோபால் தற்காலிக பணியிட நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய ரக அரசு பேருந்தின் சேவையினை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கொடியசைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
திண்டிவனம் அடுத்த ரெட்டணை பகுதியைச் சோ்ந்தவா் ரா.கிருஷ்ணமூா்த்தி(53). மீன் வியாபாரியான இவா், நேற்று வியாபாரத்தை முடித்துவிட்டு கிழக்குக் கடற்கரை சாலையில் அனுமந்தை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற காா், இவர் மீது மோதியது. இதில், கிருஷ்ணமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனா்.
தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு நடைபெறும் இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.