Villupuram

News October 29, 2025

விழுப்புரம் :1000 ஆண்டுகள் பழமையான சிற்பம் கண்டெடுப்பு

image

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அடுத்த ஆக்கிரமித்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சிற்பங்களும் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைப் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

News October 29, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.28) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

விழுப்புரம்: 10க்கும் மேற்பட்டோருக்கு நாய் கடி!

image

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திக்குப்பம் பகுதிகளில் இன்று (ஆக.28) 10க்கும் மேற்பட்ட முதியோர்களையும், பெண்களையும் தெரு நாய்கள் கடித்தன. இச்சம்பவத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் பாதிக்கப்பட்டோர் வேதனையடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

News October 28, 2025

விழுப்புரம்: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

image

விழுப்புரம் மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க.

News October 28, 2025

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

image

விழுப்புரம்: வானூர் அருகே புதுக்குப்பம் ஏரிக்கரை ஆபத்தான நிலையில் உள்ளதால் சீரமைக்க வேண்டும் எனக் கோரி, விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா நடத்தினர். போலீசார் தடுத்ததால் அலுவலகம் முன் அமர்ந்து கோஷமிட்டனர். ஏரிக்கு 64 ஏரிகளின் உபரிநீர் வரும் நிலையில், கரை பணமின்றி உடையும் அபாயம் உள்ளதாக மனுவில் தெரிவித்தனர். டி.ஆர்.ஓ. அரிதாஸ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே கலைந்தனர்.

News October 28, 2025

விழுப்புரத்தில் கிராம சபைக் கூட்டம்!

image

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 1ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஆகையால், பொதுமக்கள் இதில் தவறாது பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 28, 2025

விழுப்புரம்: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

image

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க

News October 28, 2025

விழுப்புரம்: PHONE தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 28, 2025

விழுப்புரம்: சுகாதார ஆய்வாளர் எடுத்த விபரீத முடிவு

image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (38). விக்கிரவாண்டி பகுதியின் சுகாதார ஆய்வாளர் ஆவார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் ராஜலட்சுமி, சென்னைக்கு சென்ற நிலையில், சரவணன் தன் வீட்டில் மாலை 5:30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 28, 2025

விழுப்புரம் ஆட்சியரின் அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டம், விவசாயிகள் அக்டோபர் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 31.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளும், விவசாயிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!