Villupuram

News April 1, 2025

வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், மரக்காணம், வானூர், மயிலம், விக்கிரவாண்டி, முகையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ஒரு சில ரசாயனங்களை பயன்படுத்தி ஊசியின் மூலம் தர்பூசணில் செலுத்துவதாக தற்போது நிலவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 1, 2025

துரத்தி சென்று கண்ணாடியை உடைத்து அட்டூழியம்

image

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி தனது குடும்பத்துடன் நேற்று (மார்.31) காரில் திண்டுக்கல் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம் புறவழிச்சாலையில் பைக் மீது கார் லேசாக உரசியது. இதனால் ஆத்திரமடைந்த மூவர் காரை துரத்தி சென்று கார் கண்னாடியை அடித்து உடைத்தனர். 30 கி.மீ., வரை காரை துரத்தி சென்று மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் ராஜேஷ் (24). ராஜா(25) வினோத் (22) மூவரை போலீசார் கைது செய்தனர்.

News March 31, 2025

தீராத குடும்ப பிரச்சனைகள் தீர்க்கும் கோவில்

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால், கணவன் மனைவி பிரச்சனை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. நீங்களும் இங்கு சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 31, 2025

விழுப்புரம் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு

image

தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இரவு முதல் கட்டண உயர்வு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை சொந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மற்றும் நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடி மற்றும் பல சுங்கச்சாவடிகள் அடங்கும் என்பதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <>ஷேர் <<>>பண்ணுங்க

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

பைக் மீது பேருந்து மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

image

திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ், ராகவன். நண்பர்களான இருவரும், நேற்று (மார்.30) காலை பைக்கில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றனர். பைக்கை ராகவன் ஓட்டினார். அப்போது எதிரில் வந்த அரசு விரைவு பேருந்து பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

News March 30, 2025

விழுப்புரம் விவசாயிகள் கவனத்திற்கு 

image

விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம் கிசான் ஊக்கத்தொகை பெறும் 89,958 விவசாயிகளில் தற்போது வரை 50,404 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 39,554 விவசாயிகள் ஏப்ரல் -8 ஆம் தேதிக்குள் தனி அடையாள எண் பெற வேண்டும், அப்போதுதான்  பி.எம் கிசான் ஊக்கத்தொகை  தொடர்ந்து பெற முடியும்  என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <>ஷேர் <<>>செய்யுங்கள்

News March 30, 2025

இயற்கை உபாதை கழிக்க சென்றவர் உயிரிழப்பு

image

திண்டிவனம் அடுத்த தளவாய் கிராமத்தைச் சேர்ந்த பரணி (19), நேற்று முந்தினம் (மார்ச் 28) காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்றுள்ளார். ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ரயில் அவர் மீது பலமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!