India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,254 நியாய விலைக்கடைகளும் வரும் 5ஆம் தேதி செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான எடையில், 100% உரிய நேரத்தில் பொருள்கள் வழங்க வேண்டும், பாமாயில், துவரம் பருப்பு ஆகியவற்றை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, முழு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி 10.09.2024, 11.09.2024 ஆகிய நாட்களில் முற்பகல் 10.00 மணிக்கு விழுப்புரம் பி.என். தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கும்/ அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைப்பெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை முதல் வெயில் அதிகமாக காணப்பட்டன இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டுகள் சற்று அவதியடைந்தனர்.விழுப்புரம் நகர், புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் திங்கட்கிழமை அன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கோரிக்கை மனுவை வழங்குவார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 683 கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ளனர்.
விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை 67 சாட்சிகள் இருந்த நிலையில் 51 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அதில் 30 சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாது. எனவே அரசு தரப்பில் சாட்சிகளை விசாரிக்க மேலும் அவகாசம் கோரப்பட்டதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை கிராமத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் நடத்துவது தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் த.வெ.க அனுமதி கேட்டு இருந்தது. இது தொடர்பாக, மாவட்ட காவல்துறை மாநாடு தொடங்கும் நேரம், எவ்வளவு கூட்டம் வரும், வாகனங்கள் நிறுத்தும் இடவசதி குறித்து 21 கேள்விகளுக்கு 5 நாட்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு: விழுப்புரம் 8 மி.மீ, கோலியனூர் 7 மி.மீ, கெடார் 13 மி.மீ, வளவனூர் 7 மி.மீ, முண்டியம்பாக்கம் 6 மி.மீ, நேமூர் 10 மி.மீ, கஞ்சனூர் 11 மி.மீ, சூரப்பட்டு 8 மி.மீ, வானூர் 8 மி.மீ, முகையூர் 16 மி.மீ, திருவெண்ணைநல்லூர் 8 மி.மீ, அரசூர் 3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வெளியே செல்லும் பொதுமக்கள் குடை எடுத்து செல்லுங்கள். இன்று மழை பெய்யுமா?
மரக்காணம் பேரூராட்சி மற்றும் கிழக்கு ஒன்றியத்தில், நேற்று செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 8 பேர் மாற்று கட்சியிலிருந்து விலகி அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில், மாவட்ட பொறுப்பாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ சீத்தாபதி, மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், பொதுக்குழு உறுப்பினர், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேல்மலையனூரில் உள்ள பிரசித்திப்பெற்ற அங்காளம்மன் பரமேஸ்வரி திருக்கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்துவிட்டு ஆம்னி வேன் ஒன்று வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, வேட்டைக்காரன்பட்டி அருகே சென்றபோது வேனின் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், அதிஷ்டவசமாக சிறுசிறு காயத்துடன் அனைவரும் உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த 5 பேர் ங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.