Villupuram

News September 6, 2024

விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. விக்கிரவாண்டி, மரக்காணம், கோவிந்தபுரம், திருப்பச்சாவடிமேடு, பனையபுரம், வானூர், பனையபுரம், சிறுவழிக்குப்பம், வாக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி ஆறாக ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மட்டும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். உங்கள் பகுதியில் மழை பெய்ததா?

News September 5, 2024

காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (05.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2024

தனது ஆசிரியரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

image

திருக்கோயிலூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தனது பேராசிரியர் பாஸ்கரன் என்பவரை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்தார். ஆசிரியர் தினமான இன்று தனக்கு பாடமெடுத்த ஆசிரியரை தேடிச் சென்ற அமைச்சர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரின் இத்தகைய இச்செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

News September 5, 2024

அரசு உதவி பெற ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

image

அரசு உதவிகளைப் பெற ஆதரவற்ற பெண்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற மற்றும் பேரிளம்பெண்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளியமுறையில் www.tnwidowwelfareboard.gov.in என்ற இணையதளம் மூலம் கைப்பேசி வழியாகவோ அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்களின் மூலமோ தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகி பயனடையலாம் என ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

ஸ்கூட்டி மீது காட்டுப்பன்றி மோதி விபத்து: பெண் பலி

image

விக்கிரவாண்டி அடுத்த பகண்டைபாளையத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர், நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு ஸ்கூட்டி வாகனத்தில், செய்யாத்து வின்னான் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென காட்டுப்பன்றி ஒன்று குறுக்கே வந்து ஸ்கூட்டி மீது மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த சுகந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News September 5, 2024

5,000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டெடுப்பு

image

விழுப்புரம் அருகே முட்டத்தூர் கிராமத்தில் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இங்கு அதற்கான தடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் 5,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வெண் சாந்து ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டது” என்றார்.

News September 5, 2024

மாவட்ட பொருளாளருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அமைச்சர்

image

விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர் திரு. N. ரமணன் அவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்கள் நேற்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். உடன் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் P.சேகர் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் இருந்தனர்.

News September 5, 2024

பிரபல ஜோதிடருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

image

கோலியனூர் ஒன்றியம் அரசமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் பிரபல ஜோதிடர் வெங்கடேஷ் பாபு கடந்த 45 வருடங்களாக ஜோதிடம் சார்ந்த பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் அவரின் சிறப்பான ஜோதிடம் சார்ந்த பணியை பாராட்டி குளோபல் யுனிவர்சிட்டி, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

News September 4, 2024

இளைஞர்கள் தின விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அழகு மூலம் சர்வதேச இளைஞர்கள் தின விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், நாளை (05.09.2024) காலை 7:30 மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கலாம்.

News September 4, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (04.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!