Villupuram

News September 7, 2024

மூட பழக்கவழக்கங்களை ஒழிக்க சட்டம் இயற்ற எம்பி கோரிக்கை

image

மதுரையில் புத்தக திருவிழாவில் மாணவிகள் சாமி ஆடியது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆன நிலையில் இது குறித்து விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் பீகார், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இயற்றியது போல் மூடப் பழக்கங்களைத் தடை செய்யும் சட்டத்தை தமிழ் நாடு அரசு இயற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

News September 7, 2024

லஞ்ச ஒழிப்பு சோதனையில் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

image

திண்டிவனம் சந்தைமேடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்வதற்கு அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் பேரில் திண்டிவனத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் ரொக்கம், ரூ. 25ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

News September 7, 2024

காவல்துறை கேள்விகளுக்கு பதில் கடிதம் வழங்கிய தவெக

image

விஜயின் தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்துவதற்காக காவல்துறையிடம் கடந்த மாதம் 28ஆம் தேதி அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல்துறை சார்பில் 21 கேள்விகள் எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கான பதில் கடிதத்தை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில், முக்கிய நிர்வாகிகள் விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி சுரேஷிடம் வழங்கினர். இதில் தவெக கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

News September 6, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (06.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 6, 2024

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு குறித்த தகவல்

image

தவெக மாநாட்டிற்கு அனுமதி கோரி பதிலளிக்கப்பட்ட மனுவில் சில பதில்கள் வெளியாகியுள்ளன. அதாவது, விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் 85 ஏக்கரில் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், சுமார் 1.5 லட்சம் பேர் கலந்துகொள்ளவார்கள். தொண்டர்கள் வந்து செல்ல 14 முதல் 16 வழிகளும், தலைவர்கள் செல்ல 4 வழிகளும் அமைக்கபடவுள்ளது. அனைவருக்கும் அங்கேயே உணவு சமைக்கப்படவுள்ளது. மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை மாநாடு நடைபெறவுள்ளது.

News September 6, 2024

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் அதீத மழை பெய்தாலும் அதனை எவ்வாறு எதிர் கொள்வது, தாழ்வான பகுதிகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

News September 6, 2024

சுங்கச்சாவடிக்கு கட்டணம் நிர்ணயம்

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வழியாக திண்டிவனம் செல்லும் நங்கிளிகொண்டான் சுங்க சாவடி திறக்கப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இந்நிலையில், அதற்கான விலை தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார், பேருந்து, வேன், லாரி போன்றவைகளுக்கு கட்டணமாக ஒரு முறை சென்றுவர ரூ.60 முதல் ரூ.400 வரையும், ஒரே நாளில் திரும்பி சென்றுவர ரூ.95 முதல் ரூ.600 வரையிலும் நிர்ணயம் செய்துள்ளது.

News September 6, 2024

விழுப்புரம் ஆட்சியா் பழனி அறிவுறுத்தினாா்

image

பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவா்கள் சட்ட விதிகளுக்கு உள்பட்டு, பாதுகாப்பான முறையில் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விழுப்புரம் ஆட்சியா் பழனி அறிவுறுத்தினாா். முறையாக அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி தயாரிக்க வேண்டும், பட்டாசுகளை கையாளும் முறைகள் குறித்து உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கு விளக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு குறும்படம் திரையிடப்பட்டது.

News September 6, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. அதன்படி, முண்டியம்பாக்கம் மற்றும் வளவனூரில் அதிகபட்சமாக 40 மி.மீ. அளவும், கெடார் 39 மி.மீ. அளவும், சூரப்பட்டு 30 மி.மீ. அளவும், வளவனூர் 25 மி.மீ. அளவும், விழுப்புரம் மற்றும் கோலியனூரில் 18 மி.மீ. அளவும், திண்டிவனத்தில் 10 மி.மீ. அளவும் மழை பதிவாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 6, 2024

மாணவனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்திய ரஜினி

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த சையது சல்மான் என்ற மாணவன், தனது மேற்படிப்பிற்காக கல்லூரி கட்டணம் செலுத்த இயலாமல் பணமின்றி தவித்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நடிகர் ரஜினிகாந்த், அந்த மாணவனின் விவரங்களை வாங்கி கொண்டார். பின்னர், மாணவனின் கல்வி கட்டணத்தை நேரடியாக அந்த கல்லூரியின் வங்கி கணக்கிற்கே அனுப்பி நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இதனை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!