Villupuram

News September 9, 2024

திமுக பொதுச் செயலாளருக்கு விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு

image

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனுக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமான பொன்முடி மற்றும் மாவட்டச் செயலாளர் பொன் கௌதம சிகாமணி ஆகியோர் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

News September 8, 2024

விஜய் கட்சி மாநாட்டிற்கு காவல்துறை விதித்த நிபந்தனை

image

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளே உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் யார் தலைமையில் எந்தெந்த ஊரிலிருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை கொடுக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

News September 8, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வடமேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) விழுப்புரம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவிப்பு

image

விழுப்புரம் (தெற்கு) மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் செப் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் பொன்.கௌதமசிகமணி தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சிறப்பு உரையாற்றுகிறார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

News September 8, 2024

பேருந்துகள் உரசி கொண்டது: பயணியின் கை துண்டிப்பு

image

திண்டிவனம், தீவனூர் அருகே உள்ள விழுக்கம் பகுதியில் நேற்று காலை 2 அரசு பேருந்துகள் உரசியதால் விபத்து ஏற்பட்டது. இதில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரின் வலது கை துண்டானது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும், கை துண்டிக்கப்பட்ட யுவராஜ் புதுவை ஜிப்பர் மருத்துவமனையிலும் சிகிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News September 8, 2024

10 மாத குழந்தையுடன் தந்தை பலி

image

திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை மேல்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் நேற்று காலை 10 மணியளவில் மனைவி மற்றும் 10 மாத குழந்தையுடன் உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, டிப்பர் லாரி பைக் மீது உரசியதில் பைக் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில், முத்துக்குமரன் மற்றும் 10 மாத குழந்தை லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 7, 2024

விழுப்புரம் விநாயகர் ரூபாய் நோட்டுகளில் காட்சி

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் விநாயகர் காட்சியளித்தார். இதுமட்டுமல்லாமல் ரூ.20 முதல் ரூ.500 வரையிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதற்கு ரூ.60000 பயன்படுத்தப்பட்டது. விநாயகரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

News September 7, 2024

வி.சித்தாமூரில் நாளை சிபிஎம் கிளை மாநாடு

image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள வி.சித்தாமூரில் சிபிஎம் கட்சி சார்பில் 4- வது கிளை மாநாடு எஸ்.சந்திரன் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 70- ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடியிருப்போருக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட உள்ளன. இதில் மாவட்ட செயற்குழு வேல்மாறன், வட்ட செயலாளர் கணபதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

News September 7, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (07.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 7, 2024

தீவிரமெடுக்கும் தவெக மாநாடு பணிகள்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மாநாட்டு தேதியை அக்கட்சியின் தலைவர் நாளை அறிவிக்கவுள்ளார். முன்னர் கூறப்பட்ட செப்.23-ஆம் தேதி மாநாட்டு தேதி அறிவிக்கப்பட்டால், மிகக் குறுகிய காலகட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மாநாட்டை நடத்துவதும் பெரும் சவாலான ஒன்று என அரசியல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். மாநாடு குறித்த உங்கள் கருத்து?

error: Content is protected !!