India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி இரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வரும் ரயில் (எண்: 06738) செப்.27, அக்.2 தேதிகளில் ரத்து செய்யப்பட உள்ளது. மேலும், திருச்சி-விழுப்புரம் மெமு விரைவு ரயில் செப்.22, 24 ஆகிய தேதிகளில் விருதாச்சலம் வரை மட்டும் இயக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 150 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் ஒன்றிய பெருந்தலைவர், வட்டாட்சியர், ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நடந்தால் உடனே கால் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க
விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினத்தை அடுத்து இன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். திருச்சி மற்றும் விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகள், நிற்கக் கூட இடமின்றி கூட்ட நெரிசலாக திண்டிவனம் வருகின்றன. இதனால், பேருந்துகளில் பயணிக்க முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். கூடுதல் சிறப்பு பேருந்து வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
மதுரை, ஒத்தக்கடை பகுதியில் உள்ள மைதானத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து, விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் க.பொன்முடி, எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான், ஆட்சியர் ஆகியோர் பங்கேற்று மக்களுக்கு ஆணைகளை வழங்கி சிறப்பித்தனர்.
த.வெ.க. மாநாட்டிற்கு அனுமதி அளித்ததில் எந்த தாமதமும் இல்லை என விழுப்புரம் மாவட்ட காவல் துறை விளக்கமளித்துள்ளது. மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கடந்த 28ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பில் 21 கேள்விகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டதற்கு, தவெக தரப்பில் 6ஆம் தேதி பதில் அளித்தனர். இதையடுத்து 8ஆம் தேதி அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது என விழுப்புரம் மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதியன்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கௌதமசிகாமணி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக மாவட்டச் செயலாளருக்கு பொன். கௌதம சிகாமணி இன்று அறிவித்துள்ளார்.
செஞ்சி அடுத்த கருங்குழி கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சுதாகர் தலைமையில், செஞ்சி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை மாணவர்கள் கமலேஷ், கார்த்திக் ஆகியோர் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதில் இரண்டு புதிய கல்வெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டுகள் 700 ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுகுறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் பயன்பெறும் பணிகள் உள்ளன. தனிநபர் பண்ணை குட்டை அமைத்தல், தனிநபர் நிலங்களில் மண்வரப்பு மடித்தல், கால்நடைத் தீவன புல் வளர்த்தல், பழமரக்கன்றுகள், அமைத்தல், நாற்று பண்ணை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 7402606336 என்ற எண்ணில் அழைக்கலாம் என என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில், வரும் பருவமழை, புயலின் போது அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, மின்வாரியத்துறை, நீர்வளத்துறை, நெஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். மழைக்கும் முன் மற்றும் மழை பாதிப்பு ஏற்பட்ட பின் செய்ய வேண்டியவை குறித்து ஆட்சியர் விரிவாக ஆலோசனை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.