Villupuram

News September 11, 2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

image

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டுப் போட்டிகளை உயர் கல்வித் தறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பழனி, எம் எல் ஏக்கள் அன்னியூர் சிவா, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர். 

News September 11, 2024

இமானுவேல் சேகரனுக்கு திருமாவளவன் மரியாதை

image

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் இன்று இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News September 11, 2024

பேச்சு என்ற பெயரில் ஆசிரியர்களை அரசு ஏமாற்றி விட்டது..!

image

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தல், சமவேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் எனப்படும் ஆசிரியர்கள் அமைப்பு ஒருநாள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

விக்கிரவாண்டி டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி தனி வட்டமாக செயல்பட்டு வந்த நிலையில், டி.எஸ்.பி. நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், விக்கிரவாண்டி, பெரியதச்சூர், வளவனூர், கண்டமங்கலம், கெடார், கஞ்சனூர் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கிய விக்கிரவாண்டி உட்கோட்ட டி.எஸ்.பி.யாக ஜி.நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு காவலர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News September 11, 2024

திண்டிவனத்தில் இன்று கடை அடைப்பு

image

வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் த.வெள்ளையன், இன்று உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவரது மறைவை அனுசரிக்கும் விதமாக, இன்று (புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முழு கடையடைப்பு நடைபெறும் என திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து வியாபாரிகளும் மற்றும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News September 10, 2024

வெள்ளையன் மறைவு: விழுப்புரம் எம்பி இரங்கல்

image

வணிகர் சங்கத் தலைவராக மட்டுமின்றி தமிழ்த் தேசிய உணர்வாளராகவும் திகழ்ந்த வெள்ளையனின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக விழுப்புரம் மாவட்ட எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஈழப் போராட்டக் களத்தில் விசிகவுடன் எப்போதும் இணைந்து நின்றவர். அவருக்கு என் அஞ்சலி என தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு, டிடிவி தினகரன், திருமவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News September 10, 2024

விழுப்புரம்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

image

விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்தில் சத்தீஸ்கரைச் சேர்ந்த பீமா மண்டாவி (60), அசோக் குமார் ஓயான் (19), கஜுனு (20) ஆகிய மூவர் பயணித்த நிலையில், பீமா மண்டாவி பேருந்திலேயே உயிரிழந்துள்ளார். உடன் வந்த இருவரையும் சடலத்துடன் தற்காலிக ஓட்டுநர் ராம்குமார் இறக்கிவிட்டுள்ளார்.இதை எடுத்து தற்காலிக ஓட்டுநர் ராம்குமார் மற்றும் நடத்துநர் ரசூல் ரகுமானை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News September 10, 2024

டெல்லி பிரதிநிதியை வரவேற்ற அமைச்சர்

image

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் இன்று (10.9.2024) விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கௌதம சிகாமணி, மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 10, 2024

விழுப்புரத்தில் சிறுமிக்கு தாலி கட்டியவர் மீது போக்சோ

image

விழுப்புரம் மாவட்டத்தில், 10-வகுப்பு படித்த 17-வயது சிறுமியை திருமணம் செய்து 6-மாத கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே சாலை அகரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மீது விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்கதையாகி வருகிறது

News September 10, 2024

விக்கிரவாண்டி மாநாடு குறித்து விஜய் ஆலோசனை

image

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மாநாட்டை நடத்துவது குறித்து பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் சென்னை நீலாங்கரை இல்லத்தில் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!