India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டிவனம் ஆா்.டி.ஓ அலுவலகத்தில் நேற்று முன்தினம் ரூ.1.20 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், மோட்டாா் வாகன ஆய்வாளா் சுந்தரராஜ், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்ட 38 போ் மீது விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகள் சிக்கிய இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து?
யுனஸ்கோ குழவினர், செஞ்சிக்கோட்டையினை உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக அங்கீகரிப்பது தொடர்பாக பார்வையிட வருகை தரவுள்ளனர். அதனை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நேற்று (12.09.2024) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உடனிருந்தார்.
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.12) முதல் செப்.20 வரை விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து நன்பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் காட்பாடியிலிருந்து 4.40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
விழுப்புரம் திண்டிவனம் புறவழிச் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஊழல் தடுப்பு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை செய்தனர். இதில், அலுவலக ஊழியா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.19 லட்சம் கைப்பற்றப்பட்டது. பின்னர்,அலுவலக ஊழியா்கள், இடைத்தரகா்களிடம் விசாரணை நடத்தியதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனர்.
விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் செப்டம்பர் 13 காலை 11 மணியளவில், பணியாளர் நாள் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் பணியாளர்கள் கலந்து கொண்டு பணியின் போது ஏற்படும் பல்வேறு குறைகள் குறித்து தெரிவிக்கலாம், எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 85 ஏக்கர் பரப்பளவு இடத்தையும், வாகனங்கள் நிறுத்தவுள்ள பைபாஸ் சாலையின் கிழக்கு பகுதியிலுள்ள 40 ஏக்கர் மற்றும் மேற்கு பகுதியிலுள்ள 28 ஏக்கர் பரப்பளவு இடத்தையும் நேற்று புதிதாக பொறுப்பேற்றுள்ள விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநாட்டு நடைபெறும் தேதி அறிவிப்பு குறித்து உங்கள் கருத்து?
1971 இல் அன்றைய முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்தியது போல மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும என விழுப்புரத்தில் விசிக தலைவர் தொல். திருமா தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைத்த ‘மது – போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு’ கலந்தாய்வுக் கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் பேசினார்.
சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப் பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத் துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்ன பாமக நிறுவனர் எஸ்.இராமதாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மயிலம் மத்திய ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழக முதல்வர் அறிக்கையின்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் நமது திமுக வரலாற்று வெற்றியை பதிவு செய்ய இன்றே கள பணியை தொடங்குவோம். ஒற்றுமையாக செயல்படுவோம். தமிழ்நாட்டை வென்றேடுப்போம்” என திமுக தொண்டர்கள் மத்தியில் அதிரடியாக பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் த.வெள்ளையன் மறைவையொட்டி இன்று (11.09.2024) செஞ்சி வர்த்தக சங்கம் மற்றும் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். செஞ்சி பகுதியில் முழுமையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.