Villupuram

News September 13, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நடந்தால், உடனே போலீசாருக்கு அழையுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 13, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

எதிர்வரும் 17.09.2024 அன்று (செவ்வாய்கிழமை) மிலாடி நபி DRY DAY ஆக அனுசரித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL1) மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

News September 13, 2024

செப்.20ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், மருதூர் பகுதியில் உள்ள இடுகாட்டை ஆக்கிரமித்து பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருப்பதை கைவிடவும், நகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்கு காரணமான நகராட்சியை கண்டித்து வரும் செப்.20ஆம் தேதி முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.

News September 13, 2024

அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளருக்கு மிரட்டல்?

image

அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது மிகவும் கண்டித்தக்கது என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அதை வீடியோவாக வெளியிட்டதும், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டதை வீடியோ வெளியிட்டதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இதன் மூலம் பாஜகவினர் விளம்பரத்திற்காக எதையும் செய்வார்கள் என்பது தெளிவாகிறது என்றார்.

News September 13, 2024

விழுப்புரத்தில் 21,080 பேர் தேர்வு எழுதுகின்றனர்

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி – II மற்றும் II A) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. விழுப்புரம் வட்டத்தில் 33 தேர்வு மையங்களில்
14,920 நபர்களும், திண்டிவனம் வட்டத்தில் 20 தேர்வு மையங்களில் 6,160 நபர்கள் என
மொத்தம் 53 தேர்வு மையங்களில் 21,080 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

வரலாற்று வெற்றியை பதிவு செய்ய வேண்டும்: அமைச்சர்

image

செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு, “தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கையின்படி 2026இல் சட்டமன்ற தேர்தலில் திமுக வரலாற்று வெற்றியை பதிவு செய்ய இன்று முதலே கள பணியை தொடங்குவோம். ஒற்றுமையாக செயல்படுவோம். திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள். எனவே, கடமையை பொறுப்புடனும், கண்ணியத்துடனும் நிறைவேற்றங்கள்” எனப் பேசினார்.

News September 13, 2024

முதல்வரின் அமெரிக்கப் பயணத்தை விமர்சித்த ராமதாஸ்

image

முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்து ராமதாஸ் அறிக்கை வெளிட்டுள்ளார் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் தலைமையிலான குழுவினர், 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இது மிக மிக குறைவு என விமர்சித்துள்ளார்.

News September 13, 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைத்தீர் முகாம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் செப் 14-ஆம் தேதி (நாளை) பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி, கைபேசி எண் மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கையை மனுக்களாக கொடுத்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்து நண்பர்களுக்கு உதவவும்.

News September 13, 2024

விடுமுறையில் 410 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் மிலாடி நபியை ஒட்டி அதிகளவிலான மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவர்களின் வசதிக்காக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கூடுதலாக 410 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று (செப் 12) தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 13, 2024

பாலியல் வன்கொடுமை தடுப்பு காவலில் மூவர் கைது

image

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி 16-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சரண்ராஜ், வாசு, பிரவீன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மாவட்ட எஸ்.பி., தீபக் சிவாஜி பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவின் படி, போலீசார் தடுப்பு காவலில் சரண்ராஜ், பிரவீன், வாசு மூவரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!