India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக அரசைக் கண்டித்து, பாமக சார்பில் வரும் 20ஆம் தேதி மாலை திண்டிவனத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்தக் கூட்டத்தில், பாமக மற்றும் அதன் சார்பு இணை அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட பஞ்சமி நிலங்களின் விவரங்களை அரசு அமைத்த உயர்நிலைக்குழு வெளியிட வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக்குழு, எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பஞ்சமி நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிடவேண்டும். அந்த நிலங்களைக் கையகப்படுத்தி தகுதியானவருக்கு தர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட முழுவதும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. பின்னர், மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து, விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பணிபுரிய, ஒரு மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். சமூகவியல், சமூகப்பணி போன்றவற்றில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 30 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஒரு இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
திண்டிவனம் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய இடத்தில் போதுமான கட்டமைப்பு வசதியின்றி செயல்பட்டு வந்தது. தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு, பிப்ரவரி 5ஆம் தேதி திண்டிவனம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ரூ.60 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி ஜோராக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை காண மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் விழுப்புரம் மாவட்ட ஹாக்கி அணி முதல் சுற்றில் தர்மபுரி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது சுற்றில் நாமக்கல் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்க கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள எஸ்சி, எஸ்டினருக்கு சந்தை மதிப்பில் 50% அல்லது ரூ.5 லட்சம் மானியமும், 100% பதிவு கட்டண விலக்கு, பங்கு தொகை தேசிய பட்டியல் இனத்தோர் நிதி மேம்பாட்டு கழக நிதியிலிருந்து 6% வட்டியில் வங்கி கடனுக்கு www.tahdco.com விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருப்பச்சாவடி மேடுபகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். மரகதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் லோகு மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் தரணி ஆகிய இருவரும் இன்று பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, ஏற்பட்ட விபத்தில் லோகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து, நாளை விஜயதசமி கொண்டாட உள்ள நிலையில், அதற்கான பூஜை பொருள்களான அவல், பொறி, பழங்கள், பூ, அலங்கார தோரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. விழுப்புரம் மார்க்கெட் வீதியான காந்தி வீதி, பாகர்ஷா வீதி, நேருஜி சாலை பகுதிகளில், காலை முதல் பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடித்தது. பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.