Villupuram

News September 15, 2024

அண்ணா பிறந்தநாள் விழா: நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் விழா, செஞ்சி அடுத்த அப்பம்பட்டில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு, அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்வில், அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமென ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 14, 2024

சலவைத் தொழிலாளியை கொலை செய்த இருவர் கைது

image

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். சலவை தொழிலாளியான இவர், தனது நண்பர்களான முரளி மற்றும் அருண்குமார் இருவருடன் நேற்று முன்தினம் சித்தேரிக்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் முரளி, அருண்குமார் இருவரும் ரஞ்சித்குமார் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக தாலுகா போலீசார் அருண்குமார், முரளி இருவரையும் கைது செய்தனர்.

News September 14, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 14, 2024

மூன் டிவி உரிமையாளர் மறைவு: எம்.பி. அஞ்சலி

image

புதுச்சேரி மூன் டிவி உரிமையாளரும், ஸ்கேட்டிங் சங்கப் பொறுப்பாளருமான ஸ்ரீராம் பிரசாத்ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது திருவுடலுக்கு, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார் இன்று நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். பின்னர், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

News September 14, 2024

TNPSC தேர்வினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் TNPSC Group 2 – தேர்வினை மாவட்ட ஆட்சியர் சி. பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில நடைபெற்ற குரூப்-2 எழுத்து தேர்வினை 15,708 பேர் கலந்து கொண்டு எழுதினார்கள். 5,372 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2024

விழுப்புரத்தில் இறுதி கல்லூரி கலந்தாய்வு

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் செப்.19-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடக்க உள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், இக்கலந்தாய்வில் டி.சி உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவித்துள்ளார்.

News September 14, 2024

இணைபொருட்கள் கட்டாயப்படுத்தி விற்றால் நடவடிக்கை

image

விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் (பொ) சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்புப் பருவத்துக்குத் தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு மானிய விலை உரங்களோடு இணை பொருள்களைக் கட்டாயப்படுத்தி, விநியோகம் செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கூறப்பட்டுள்ளது.

News September 14, 2024

நிலத்தகராறில் மூதாட்டி அடித்து கொலை

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே நிலத்தகராறில் மூதாட்டி நசரம்மாள்(65) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் குமரவேல் என்பவர் மூதாட்டி நசரம்மாளை தடியால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

எதிர்வரும் 17.09.2024 அன்று (செவ்வாய்கிழமை) மிலாடி நபி DRY DAY ஆக அனுசரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL1) மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

News September 14, 2024

அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளருக்கு மிரட்டல்?

image

அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது மிகவும் கண்டித்தக்கது என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அதை வீடியோவாக வெளியிட்டதும், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டதை வீடியோ வெளியிட்டதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இதன் மூலம் பாஜகவினர் விளம்பரத்திற்காக எதையும் செய்வார்கள் என்பது தெளிவாகிறது என்றார்.

error: Content is protected !!