India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுகளை நூலகமாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து சொந்த நுாலகங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் செயல்படுத்தி வரும் நூல்கள் விவரங்களை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பசுமையான தமிழ்நாட்டினை உருவாக்கும் பொருட்டும், நீர் வளத்தை காக்கும் பொருட்டும், விவசாயப் பெருமக்கள் பயனடையும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு பசுமை இயக்க திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் நடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 இலட்சம் பனை மரவிதைகள் நடும் நிகழ்ச்சியானது நாளை நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விழுப்புரம் 20 மிமீட்டர், கோலியனூர் 26 மி மீட்டர், வளவனூர் 22 மி மீட்டர், கெடார் 23 மி மீட்டர், முண்டியம்பாக்கம் 8மி மீட்டர், நேமூர் 25 மி மீட்டர், சூரப்பட்டு 19 மி மீட்டர், வானூர் 3 மி மீட்டர், திண்டிவனம் 6 மி மீட்டர், மரக்காணம் 12 மி மீட்டர், செஞ்சி 22 மி மீட்டர், அவலூர்பேட்டை 10 மி மீட்டர் என மாவட்டத்தில் சராசரியாக 12 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
த.வெ.க மாநாட்டிற்கான வாகனங்கள் நிறுத்தும் இடத்தை விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா ஆய்வு செய்த நிலையில், மாநாட்டுக்கு கூடுதலாக 75 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். த.வெ.க மாநாட்டுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள சூழலில் காவல்துறையின் இந்த திடீர் உத்தரவு த.வெ.க நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தவெக முதல் மாநாடு அக்.27ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காக, மகளிா் பாதுகாப்புக் குழு, சட்ட நிபுணா் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு உள்பட 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தலைவா்கள் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். போக்குவரத்தை சீர்செய்ய 104 போ் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
செஞ்சி, பீரங்கிமேடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு அபிதகுஜாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு 500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மந்திரங்கள் ஓதி தீப ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் , கோயில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வி.சாலையில் இன்று மாலை த.வெ.க. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தக்கூடிய இடத்தினை, விழுப்புரம் உதவி கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா, விக்கிரவாண்டி டி.எஸ்.பி நந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தைச் சேர்ந்தவர் கோபு (18). இவர், அதேப் பகுதியை சேர்ந்த தனது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். திருப்பசாவடிமேடு அருகே கார் மீது பைக் மோதியதில் கோபு படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மக்கள், திருப்பச்சாவடிமேடு பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின் மறியலை கைவிட்டனர்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (அக்.12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். ஷேர் பண்ணுங்க.
கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து, விழுப்புரம் எம்.பி. சு.வெங்கடேசன் தனது X பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “6 நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின்போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே. ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.