Villupuram

News September 16, 2024

மேல்மலையனூரில் 120 ஆண்டுக்கு பின் நடைபெற்ற கும்பாபிஷேகம்

image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரஹன் நாயகி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, மகா அபிஷேகமமும், அன்னதானம் மற்றும் சுவாமி திருக்கல்யாணம், திருவீதியுலா ஆகியவை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் சுமாா் 120 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News September 16, 2024

Dr. மீனா முத்தையாவிடம் ஆசிபெற்ற பாமக தலைவர்

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியாரின் பெயர்த்தியும் கல்வியாளர் மற்றும் கொடையாளருமான டாக்டர் மீனா முத்தையாவின் 90-வது பிறந்தாள் வரும் 22 ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார்.

News September 16, 2024

விழுப்புரத்தில் குழந்தை திருமணத்தில் மூவர் கைது

image

விழுப்புரம் பி.நத்தமேடு பகுதியை சேர்ந்த கணபதி(27) புதுவையை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மகளிர் போலீசார் கணபதி, மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த கணபதியின் தாய் காவேரி, சிறுமியின் தாய் ஆகிய மூவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News September 15, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள்.

News September 15, 2024

விசிக மாநில துணைச் செயலாளர் மறைவு

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் கிராமத்தைச் சேர்ந்த விசிக மாநில துணைச் செயலாளர் (கல்வி பொருளாதாரம் இயக்கம்) பாலு, இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு, விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான எழுத்தாளர் ஏ.சேரன் மலர் வளையம் வைத்து நிர்வாகிகளுடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர், விசிக நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

News September 15, 2024

முன்னாள் அமைச்சர் மகன் திருமண நிகழ்ச்சியில் அன்புமணி

image

சென்னையில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசரின் இளைய மகன் சாய் விஷ்ணுவுக்கு நடிகை மேகா ஆகாஷ் உடன் இன்று திருமணம் நடைபெற்றது. இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அவரைத் தொடர்ந்து, பாமக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

News September 15, 2024

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

வானூர் அடுத்த பூத்துறை ஊராட்சியில், அதிமுக, பாமக, தேமுதிகவைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 250 பேர், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கௌதமசிகாமணி தலைமையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர். அவர்களுக்கு அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு திமுகவினர் வரவேற்றனர். இதில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர், மாவட்ட துணை செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 15, 2024

விழுப்புரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்

image

அண்ணாவின் 116- வது பிறந்தநாளை ஒட்டி விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் இன்று கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் பொன். கௌதம சிகாமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தனர் அப்போது எம்.எல்.ஏகள் பண்ணிர்செல்வம், அன்னியூர் சிவா, மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 15, 2024

விழுப்புரம்: ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தீர்வு

image

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பேசுகையில், “நான் முதன்மை மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற 2021 நவம்பா் முதல் 2024, ஜூன் மாதம் சுமாா் 31 ஆயிரம் வழக்குகளுக்கு ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது என கூறினார்.

News September 15, 2024

விழுப்புரத்தில் 5372 பேர் ஆப்சென்ட்

image

தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரம் வட்டப் பகுதிகளில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 14,920 பேரில் 11,181 போ் மட்டுமே எழுதினா். திண்டிவனம் வட்டப் பகுதிகளில் 6,160 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,527 போ் மட்டுமே எழுதினா். மொத்தம் 21,080 பேரில் 15,708 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்ற நிலையில், 5,372 போ் தோ்வெழுத வரவில்லை.

error: Content is protected !!