Villupuram

News September 17, 2024

முகையூரில் 10-11ஆம் நூற்றாண்டு சிற்பம்

image

விழுப்புரம் வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான செங்குட்டுவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முகையூர் அடுத்த கழுமலம் கிராமத்திலுள்ள சிறிய விநாயகர் கோயிலில், விநாயகருக்கு அருகில் சமண தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் உள்ளது. இச்சிற்பம் 10-11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மக்கள் இதை சமணச் சிற்பம் என அறியாமலேயே விநாயகருடன் சேர்த்து இதற்கும் பூஜை செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

News September 17, 2024

அக்டோபர் 15ஆம் தேதி த.வெ.க. மாநாடு?

image

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி மாநாடு நடக்க இருப்பதாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி மாநாடு நடைபெற இருப்பதாக விக்கிரவாண்டி பகுதியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

News September 17, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம். விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் ஆகிய நகரங்களைச் சார்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News September 16, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் சுட்டெரித்த வெயில்

image

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (இன்று மற்றும் நாளை) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் வெப்பம் நாளுக்கு நாள் சற்று அதிகரித்து கொண்டு செல்கிறது. அதிகளவில் அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், விவசாயிகள் என அனைத்து விதமான மக்களும் அவதிக்கு உள்ளாகுகின்றனர்.

News September 16, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால், உடனே போலீசாரை அழைத்து பயன்பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 16, 2024

விழுப்புரத்தில் 331 மனுக்கள் குவிந்தன

image

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையிலான இந்த கூட்டத்திற்கு, மாவட்ட மக்கள் ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்கள் பெறப்பட்டனர். அதனைப் பெற்ற மாவட்ட ஆட்சியர், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை கொடுத்தார்.

News September 16, 2024

காவலர்கள் மீது லாரி மோதல்: அன்புமணி கண்டனம்

image

அரியலூர், அன்னாசிநல்லூர் – அங்கனூர் சாலையில், மணல் கடத்தி சென்ற லாரியை காவலர் தமிழ்ச்செல்வன், ஊர்க்காவல் படைவீரர் வெங்கடேசனும் தடுக்க முயன்றனர். அப்போது, அவர்கள் மீது மோதிவிட்டு மணல் கடத்தல் லாரி தப்பி சென்றுள்ளது. இதில் ஒருவருக்கு கைமுறிந்த நிலையிலும், மற்றொருவர் காயமடைந்த நிலையிலும் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இச்செயல் கண்டித்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

News September 16, 2024

தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து

image

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே, இன்று காலை பொதுமக்கள் சாலையை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, காத்துக் கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்தின் பின்பக்கம், விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து வேகமாக மோதி விபத்துகுள்ளானது. இதில், தனியார் பேருந்தில் பயணித்த 2 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்னர். மற்றவர்கள் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.

News September 16, 2024

ஜெர்மனியில் எம்.பி. ரவிக்குமாரின் கவிதை

image

ஜெர்மனி நாட்டில் உள்ள எர்லாங்கன் நகரில், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் மனித உரிமைகளுக்கான கவிதைத் திருவிழா நடைபெற்றது. அதில், விசிக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், ஜனவரி 2020இல் தமிழில் எழுதி முகநூலில் பதிவிட்ட கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு பதாகையிலும், பிரசுரங்களிலும், ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. பரட்டலாமே!

News September 16, 2024

ஜெர்மனியில் எம்பி து.இரவிக்குமாரின் கவிதை

image

ஜெர்மனியில் உள்ள எர்லாங்கன் என்னும் நகரில் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் மனித உரிமைகளுக்கான கவிதைத் திருவிழா நடந்தது. இதில், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாரின் கவிதை பதாகையிலும், பிரசுரங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஜோர்ஜ் பொப்போவிக் மின்னஞ்சல் மூலம் இதனை தெரிவித்ததாக விழுப்புரம் எம்பி கூறினார்.

error: Content is protected !!