Villupuram

News September 17, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரிகளை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். அசம்பாவிதம் ஏற்படாதவாறு, முன்னெச்சரிக்கையாக போலீஸ் அதிகாரிகளை அழைத்து பயனடையுங்கள். ஷேர் பண்ணுங்க

News September 17, 2024

எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் புகார்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் அவர்களிடம் இன்று புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட அவர், இதுகுறித்து விசாரணை நடத்துவதாகக் கூறினார்.

News September 17, 2024

கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

திண்டிவனம் அடுத்த வடகொளப்பாக்கம் மைதானத்தில், இன்று இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது நொளம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். சக நண்பர்கள், அவரை தூக்கிக் கொண்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 17, 2024

தமிழக அரசு முனைப்பு காட்டவில்லை: அன்புமணி

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடஒதுக்கீட்டு போராட்டத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முனைப்பு காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

இட ஒதுக்கீடு தியாகிகள் திருவுருவ படங்களுக்கு வீரவணக்கம்

image

திண்டிவனம் மாநில வன்னியர் சங்க அலுவலகத்தில் இன்று காலை இட ஒதுக்கீடு தியாகிகள் திருவுருவ படங்களுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர். உடன் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பேராசிரியர் செல்வகுமார், வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 17, 2024

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியீடு

image

கல்வியும்,வேலைவாய்ப்பும் எட்டாக்கனியாக இருந்த பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக மரு.அய்யா விடுத்த அறைகூவலை ஏற்று, உலகமே உற்றுப்பார்த்த தொடர்சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்று காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், தாக்குதலுக்கும் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் 37-ஆவது நினைவு நாளான இன்று அவர்கள் செய்த தியாகம் ஈடு இணையற்றது என அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News September 17, 2024

பெரியார் கோட்டோவியத்துடன் எம்பி வாழ்த்து

image

தந்தை பெரியாருக்கு 146ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் எம்.பி து.ரவிக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் “மண்டை சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் “
என்ற வாசகம் மற்றும் தந்தை பெரியாரின் கோட்டோவியம் படத்தையும் சேர்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

News September 17, 2024

பாமக தொண்டர்களுக்கு மடல்

image

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிகையில், “திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: இன்னுயிரை ஈந்தேனும் இழந்த சமூக நீதியை மீட்டெடுப்பேன்! உழைப்பையும், வழி நடத்தலையும் கடந்து, இன்னுயிரை ஈர்த்தால் தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதி சாத்தியமாகும் என்றால் அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன். வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்கும் வரை ஒய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

பெண் போலீசை கத்தியால் வெட்ட முயன்ற ரவுடி கைது

image

விழுப்புரம் ஊரல்கரைமேடு பகுதியில் ஒருவர் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகர காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ, தனது குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது, அந்த நபர், பெண் கான்ஸ்டபிளை கத்தியால் வெட்ட முயன்றார். பின்னர், போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், விசாரணையில் அந்த நபர், பிரபல ரவுடி என்பது தெரியவந்தது.

News September 17, 2024

இஸ்லாமியர்களுக்கு பாமக நிறுவனர் வாழ்த்து

image

மிலாது நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, சகோதரத்துவத்தை வலியுறுத்திய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் .

error: Content is protected !!