India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் பற்றி இழிவாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று விழுப்புரம் நகராட்சி திடலில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். அசம்பாவிதம் நடக்கும்முன், போலீசாரை தொடர்பு கொண்டு பயனடையுங்கள். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பில், செஞ்சி பேரூராட்சியில் உள்ள செஞ்சி கோட்டையை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வதற்கு, யுனெஸ்கோ குழுவினர் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி செஞ்சிக்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்த இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
2024 செப்டம்பர் மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 20ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள். இதில், விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மாவட்ட ஆட்சியர் அனுமதி மாறுத்துள்ளார். இதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், மக்கள் பிரச்சனைக்காக அதிமுக முன்னெடுக்கும் போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடமிருந்த கஞ்சா போதைப் பழக்கம் இப்போது பள்ளிக் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. தெருக்கள் தோறும் கிடைக்கும் கஞ்சா, மாணவர்களையே முகவராக்கும் அவலம் எப்போது தான் அரசுக்கு பொறுப்பு வரும்? என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சமூக வலைத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வார இறுதி நாட்களான வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் (செப்.20, 21) கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், தி.மலை, போளூர் ஆகிய ஊர்களுக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 125 மற்றும் சனிக்கிழமை 125 என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில், கல்லூரி நிர்வாகம் மற்றும் இ.எஸ். நர்சிங் கல்லூரி சார்பில் இலவச பொது மற்றும் எலும்பியல் மருத்துவ முகாம் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 9:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
சமூக நீதி காவலர், இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் முன்னிட்டு தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிய இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளில் அவரது தியாகங்களை போற்றி வணங்குவோம் ஏன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 19-09-2024 அன்று கஞ்சனூர் துணை மின் நிலையம்,மரக்காணம் மற்றும் முருக்கேரி துணை மின் நிலையம், மதுரபாக்கம் துணை மின் நிலையம்,திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையம் கீழ் உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.