Villupuram

News September 19, 2024

TNPSC பணியிடங்களை 15,000 உயர்த்த வேண்டும் 2/2

image

TNPSC தேர்வை 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்பதிலிருந்தே, தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று TNPSC நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள 4ஆம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15,000 ஆக அரசு உயர்த்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

7,024 பணியிடங்களை நிரப்புவது நியாயமல்ல 1/2

image

தமிழ்நாட்டில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “2 லட்சம் பணியிடங்கள் 4ஆம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை செய்யவில்லை. TNPSC 4ஆம் தொகுதித் தேர்வு 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது. 7,024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல” என்றார்.

News September 19, 2024

செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த ராமதாஸ்

image

விழுப்புரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “போதைப் பொருள் கடத்தலுக்கு 10% போலீசாரை தவிர மற்ற அனைவரும் உடந்தையாக இருக்கின்றனர். தங்களுக்கு வர வேண்டிய லஞ்ச பணம் வந்தால் போதும் என்று நினைக்கின்ற போலீசாருக்கு, எதற்கு தொப்பி? எதற்கு சீருடை? லஞ்சம் வாங்குபவர்களை தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

News September 19, 2024

அர்ச்சகர்களுக்கு அவமரியாதை: ராமதாஸ் கண்டம்

image

அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி, தமிழகத்தின் பல கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவமதிக்கப்படுவதாகவும், வழிபாடு நடத்துவதற்கு பதிலாக கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு இந்த அநீதியை ஊக்குவிப்பது கண்டித்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

விசிக மாநாடு நடைபெறும் இடத்தில் எம்.பி ஆய்வு

image

உளுந்தூர் பேட்டையில் விசிக சார்பில் வரும் அக்டோபர் 2ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடைபெற உள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து இன்று காலை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் விசிக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News September 19, 2024

விழுப்புரத்தில் நெல் பயிர் மகசூல் போட்டி

image

விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், நெல் பயிா் மகசூல் போட்டி நடைபெற உள்ளது. மாநில அளவில் அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என அறிவிப்பு

News September 19, 2024

ஊராட்சியில் வரிகளை செலுத்த சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வழி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை நிலுவையின்றி செலுத்த வருகின்ற செப். 20, 21,23 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது,இதில் வரி செலுத்தாதவர்கள் வரி செலுத்தி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பி.இ.,பி.டெக்., செவிலியா், மருந்தியல் போன்ற கல்வித்தகுதிகளைக் கொண்ட இளைஞா்கள், பெண்கள் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள் கல்விச்சான்றிதழ், ஆதார், மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் பங்கேற்கலாம். ஷேர் செய்யவும்

News September 19, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் மாதம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது,இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை இரவு 10.45 மணிக்கு சென்றடையும், இதேபோன்று காலை 3.30 மணிக்குதிருவண்ணாமலையிலிருந்து -விழுப்புரத்திற்கு காலை 5 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2024

இன்று ஆய்வு செய்கிறார் மாவட்ட ஆட்சியர்

image

விழுப்புரம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் இன்று நடைபெற உள்ளது. அனைத்து கிராமங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்து துறை உயர் அலுவலர்கள் காலை 8.30 மணி முதல் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் பொது சேவைகள் மற்றும் அரசின் திட்டங்களை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்பட உள்ளது.

error: Content is protected !!