India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அரசு பள்ளி மாணவி தர்ஷினி. இந்த மாணவி தனது தாய் குறித்து பாடிய பாடல் இணையதளத்தில் வைரலானதையடுத்து சென்ற ஆண்டு இசையமைப்பாளர் இமான் தனது இசையில் தர்ஷினிக்கு பாட வாய்ப்பளிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இமான் இசையமைக்கும் புதிய படத்தில் அழகிய மெல்லிசை பாடல் ஒன்றை தர்ஷினி பாடியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் மேல்மலையனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணிநெடுஞ்செழியன் கலந்துகொண்டார்.
விழுப்புரம் புதுப்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரதாப். கடந்த ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று பிரதாப், அவரது தாய், சிறுமியின் தாய் மற்றும் தந்தை நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 4ஆவது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் 4 மாதங்களுக்கு ஒரு முறை வருடத்தில் 3 முறை போடப்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில், 4ஆவது சுற்று தடுப்பூசி வரும் அக்.15ஆம் தேதி வரை நடைபெறும். எனவே, இந்த முகாம்களில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத், கடந்த 2018ஆம் ஆண்டு 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, விஷ்ணு பிரசாத்திற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து விஷ்ணு பிரசாத் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், 20க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன. 8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக்., செவிலியா், மருந்தியல் படிப்பு முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (19.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் ரவிசந்திரன் சஸ்பெண்ட் செய்து, தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். கோலியனூரில் உள்ள ஸ்ரீ நடராஜா நிதியுதவி பெரும் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆசிரியர் விகிதத்தை தவறாகவும் காட்டியுள்ளார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், அவரை சஸ்பெண்ட் செய்து இதுதொடர்பான அறிக்கையை பள்ளிக்கல்வித்துறையிடம் அளிக்கப்பட்டது.
விழுப்புரம் கோட்ட அளவிலான (செப்டம்பர் மாத) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 24ஆம் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கோட்டாட்சியர் தலைமையிலான இந்தக் கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.