India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் அமமுக மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் கெங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எவான்ஸ் பால்ராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறையையொட்டி, அமைச்சர் மஸ்தான் நேற்று நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இதில், திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர், பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். www.ksb.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024-25ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற்றவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். பெண் வாரிசுகளுக்கு மாதம் ரூ.3,000, ஆண் வாரிசுகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
தமிழ்நாட்டிலுள்ள மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் அடுத்து வரும் 2 ஆண்டுகளிலும் விழிப்போடு இருக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரான பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விட்டுவிடக்கூடாது என்பதே 2026 சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா். நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “போதைப் பொருள்கள் விற்பனை தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. இபிஎஸ் தலைமையில் விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி” என்றாா்.
தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 5.25 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கும், காலை 8.05 மணிக்கு புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கும் செல்லும் பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு; விழுப்புரம் 19 மில்லி மீட்டர், கோலியனூர் 17 மில்லி மீட்டர், வளவனூர் 15 மில்லி மீட்டர், கெடார் 2 மில்லி மீட்டர், நேமூர் 9 மில்லி மீட்டர், வானூர் 26 மில்லி மீட்டர், செம்மேடு 13 மில்லி மீட்டர், வல்லம் 11 மில்லி மீட்டர், முகையூர் 24 மில்லி மீட்டர், அரசூர் 41 மில்லி மீட்டர்.
கடலூா் புதுப்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவர் சரவணன் (49). விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்த இவர், நேற்று முன்தினம் இரவு கெங்கராம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (21.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில், செஞ்சிக்கோட்டையினை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வதற்காக யுனெஸ்கோ குழுவினர் வருகைபுரிவதையொட்டி, பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் கருத்துக்கேட்பு நிகழ்ச்சியில், தொல்லியல் துறை சார்பில் வரலாற்றுச்சுவடுகள் தொடர்பான பொருட்கள் அடங்கிய கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, இன்று நேரில் பார்வையிட்டார்.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் ரயில் நிலைய யார்டு பகுதியில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக மேல்மருவத்தூர்-விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 06725) விக்கிரவாண்டியில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மேலும் விழுப்புரம்-மேல்மருவத்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண் 06726) விக்கிரவாண்டியில் இருந்து புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.