Villupuram

News September 24, 2024

வினாத்தாள் விவகாரம் தவறானது: கல்வி அதிகாரிகள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 காலாண்டு தேர்வு கணித பாட வினாத்தாள் வெளியானதாக, சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. விசாரணையில், தவறான தகவல் என தெரிய வந்தது. சமூக வலைதளத்தில் பரவிய வினாத்தாள் குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “நேற்று காலை மாணவர்களுக்கு தேர்வு எழுத வழங்கிய கணித பாடத்திற்கான வினாத்தாள், சமூக வலைதளத்தில் பரவிய வினாத்தாள் அல்ல” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News September 24, 2024

ரயில்வே தண்டவாளத்தை மாற்றும் பணி தீவிரம்

image

விழுப்புரம் – சென்னை ரயில் தடத்தில் அதிவேக ரயில்கள் செல்வதால், பாதுகாப்பாக செல்வதற்காக அதற்கேற்ற வகையில் தண்டவாளங்களும் கூடுதல் கிலோ கணக்கில் மாற்றி பொருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் சென்னை மார்க்க ரயில்கள் செல்லும் பாயிண்டில், 52 கிலோ எடையுள்ள தண்டவாளத்தை மாற்றி, 60 கிலோ எடையுள்ள தண்டவாளத்தை பொருத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது.

News September 24, 2024

விழுப்புரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

விக்கிரவாண்டி, காரணை பெரிச்சானூர், கெடார், அரசூர் துணை மின் நிலையங்களில் இன்று (செப்.24) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. அதனால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணை மின் நிலையங்களின் கீழ் மின் வசதி பெறும் அனைத்து பகுதிகளிலும் மின்தடை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். பராமரிப்பு முடிந்ததும், மின் விநியோகம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News September 24, 2024

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் செப்.26-ல் நடக்கிறது

image

விழுப்புரம் கலெக்டர் அலுவலகக் கூட்டங்கள் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

விழுப்புரம் நீதிபதி சென்னை நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்பு

image

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 3 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக பொறுப்பேற்றுள்ள மூன்று நீதிபதிகளில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமாவும் ஒருவர். நீதிபதி பூர்ணிமாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News September 24, 2024

மாநாடு நடைபெற உள்ள இடத்தில் டிஐஜி ஆய்வு

image

உளுந்தூர்பேட்டையில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெற உள்ள இடத்தில் விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News September 23, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (23.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News September 23, 2024

விழுப்புரம் கலெக்டரிடம் 658 மனுக்கள் குவிந்தன

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 658 மனுக்கள் வந்தன. அதனை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து விசாரணை அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

News September 23, 2024

விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News September 23, 2024

திமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

image

திண்டிவனம் அருகே உள்ள சின்னதோப்பு பகுதியைச் சேர்ந்த ராணி என்பவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த ரகுபதிக்கும் வீடு கட்டுவதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இரு தரப்பும் திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரகுபதி, சஞ்சய், திமுக கவுன்சிலர் ரேணுகா, கேசவன், மணி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து 2 பேரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!