India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் கிராமத்தில், இன்று அதிகாலையில் சுற்றுலா வேன் ஒன்று சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். படுகாயமடைந்த 14 பேர் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாளை (செப்.26) காலை 11 மணியளவில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாகவோ அல்லது நேரிலோ தெரிவித்து பயன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளியில் தன்னுடன் படிக்கும் மாணவியின் வீட்டின் மீது சக மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில், 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நகரில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள், ஷோ் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற முத்தரப்புக் கூட்டத்தில், இடையூறு ஏற்படாத வகையில் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். வண்டியின் பின்புறக்கதவை திறந்து வைத்து பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது. முன்னுரிமை அடிப்படையில் ஆட்டோக்களை நிறுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் சிறுவாடி அடுத்த வைடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (36) தனது மாடுகளை ஓட்டி வரும்போது இன்று (செப் 24) மாலை பெய்த மழையில் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பொதுமக்கள் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மழை பெய்துவரும் நிலையில் உளுந்தூர்பேட்டையில் மது – போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும் திடலை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் அவர்கள் இன்று பார்வையிட்டார். உடன் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பெரியார், ஒன்றியச் செயலாளர் சங்கத் தமிழன் மற்றும் விசிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திண்டிவனம் ஆ. கோவிந்தசாமி கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களுடைய 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களுடன் நாளை முதல் கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவர்களும் சேர்ந்துகொள்ளாலம் என கல்லூரி முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 12 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், மேல்மலையனூர் அடுத்த வளத்தியில் 2 சென்டிமீட்டர் மழை மற்றும் செஞ்சியில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற உள்ளது. இதற்காக வெட்டப்படும் மரங்களை காக்கும் வகையில், வெட்டப்பட்ட மரங்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தினை வேறு இடத்தில் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி, பசுமை தாயகம் மாநில துணை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு சி.வி சண்முகம் நேரில் ஆஜரான நிலையில், அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சி.வி.சண்முகம் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கை அக்.23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.