India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செஞ்சிக்கோட்டை விரைவில் உலகம் முழுவதும் புகழ்பெற போகிறது. ஆம், செஞ்சிகோகோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இந்திய அரசு பரிந்துரை செய்த நிலையில், UNESCO அதிகாரிகள் நாளை (செப்.27) கோட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இதனை அடுத்து, உலகப் பாரம்பரிய இடமாக செஞ்சிக்கோட்டை அறிவிக்கப்படும். இதனால் உலக வரைபடத்தில் செஞ்சிக் கோட்டை தனித்துவமாக இடம்பெறும்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு, வரும் அக்.27 ஆம் தேதி நடத்துவதற்கு விழுப்புரம் காவல் துறையின் மூலம் கொடுக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார் மாநாட்டிற்கு அனுமதி அளித்துள்ளார். மாநாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்ட கடிதம் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. இதனால், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு அருகே நேற்று முன்தினம் சின்னத்தம்பி என்பவர் லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றோரு லாரி, திடீரென பிரேக் பிடித்ததால், சின்னத்தம்பி ஓட்டிச்சென்ற லாரி அந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செஞ்சி பேரூராட்சி பகுதியில் உள்ள செஞ்சிக் கோட்டையினை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வதற்காக யுனெஸ்கோ குழுவினர் செஞ்சிக்கோட்டைக்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். எனவே, நாளை (செப்.27) ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் நகராட்சி பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளதாவது; 2009 -ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்கள் தங்களது பிறப்புச் சான்றிதழில் தங்கள் பெயரை பதிவு செய்ய 31.12.2024 ம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்ய இயலாது. ஆதலால் ஏற்கனவே பிறப்பு சான்று பெற்ற அலுவலகத்தை நேரில் அணுகி, விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவித்துள்ளது.
27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 125 மற்றும் சனிக்கிழமை 125 என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள வருவாய் பிரிவில் வரி வசூல் பணியில் குணா என்பவர் காலி மனைக்கு வரி விதிக்க ரூ.10000 லஞ்சம் கேட்டு பெரும்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து விழுப்புரம் நகராட்சியில் உள்ள வருவாய் பிரிவில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் விழுப்புரம் நகராட்சி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்ற செய்தி பரவி வந்தது. இதுகுறித்து பேசிய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக், “த.வெ.க. மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு என்ற செய்தி தவறானது. அக்டோபர் 27 மாநாடு நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், நிபந்தனைகள் குறித்து பேசி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில், வரும் அக்.27ஆம் தேதி த.வெ.க. கட்சியின் முதல் மாநாடு நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக, விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்து 4 நாட்கள் ஆகியும், இதுவரை காவல்துறை எந்த பதிலும் அளிக்கவில்லை. தேவர் ஜெயந்தி விழாவிற்காக ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும் என்பதால், மாநாட்டிற்கு பாதுகாப்பு மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.