Villupuram

News October 31, 2025

விழுப்புரம்: பெண் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

image

விழுப்புரம் அருகே உள்ள காவணிப்பாக்கம் மலட்டாற்றில் கடந்த 2024 மார்ச் 14 ஆம் தேதி பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்து தடையங்களை அழித்த வழக்கில், பண்ருட்டி அருகே உள்ள ரெட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த தெய்வக்கண்ணு என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றங்களை குறைக்கவும் அறிவுரை.

News October 31, 2025

விழுப்புரம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் அக்டோபர் மாத விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று அக்.31 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாய சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News October 31, 2025

கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

image

திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு நிலத்தகராறு காரணமாக செஞ்சி அருகே குறிஞ்சிப்பை கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் சேகர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் கிருஷ்ணன் அரவிந்தன் ஏழுமலை ஆகிய மூவருக்கும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆழ்ந்த நிலை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்

News October 31, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் அக்டோபர் மாத விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் அக்.31 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாய சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News October 30, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.30) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் இன்று அக்.30 விழுப்புரம் மாவட்ட ஆயுதபடை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் 27 நபர்கள் கலந்து கொண்டு ஒரு ஆட்டோ, மூன்று இருசக்கர வாகனம் என மொத்த நான்கு வானங்கள் ரூ. 68,700 தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தொகை முழுவதும் மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

News October 30, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் தலைமையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்.30. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்,அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 30, 2025

சுமை ஏற்றம் வாகனம் வழங்கிய இலட்சுமணன் எம்.எல்.ஏ

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தாட்கோ துறையின் மூலமாக முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு சுமை ஏற்றும் வாகனத்தினை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் இன்று(அக்.30) வழங்கினார். உடன் தட்கோ சேர்மன், மாநில இளைஞரணி திமுக துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

News October 30, 2025

விழுப்புரம்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

விழுப்புரம் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 30, 2025

விழுப்புரம்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!