Villupuram

News September 10, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.11) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ விஜய் மஹால், இளந்துறை
▶️ கிராம சேவை மைய கட்டிடம், எறையானூர்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், கண்டம்பாக்கம்
▶️ அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், வீரணாமூர்
▶️ ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், பாடிபள்ளம்
▶️ மனோன்மணி திருமண மண்டபம், கோட்டக்குப்பம்
பொதுமக்கள் நேரில் சென்று மனுகள் அளிக்கலாம்.

News September 10, 2025

அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பம்

image

விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தென் மண்டல தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் சார்பில், படித்த இளைஞர்களுக்கு 1 ஆண்டு தொழிற்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன்படி இதற்காக விண்ணப்பிக்க கல்வி தகுதி பொறியியல் பட்டம், பட்டய படிப்பு படித்த மாணவர்கள் இணையதள மூலம் வரும் அக்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

விழுப்புரம்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

விழுப்புரம் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 10, 2025

விழுப்புரம்: இன்றேகடைசி நாள் – உடனே APPLY பண்ணுங்க!

image

விழுப்புரம் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பேப்பர் 1 தேர்வு நவ.15 மற்றும் பேப்பர் 2க்கான தேர்வு நவ.16 நடைபெற உள்ளது. அரசு ஆசிரியராக நினைக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 10, 2025

விழுப்புரம்: உளவுத்துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில் மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA, BSc, BE, B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 10, 2025

விழுப்புரம்: மகளிர் உரிமைத் தொகைக்கு இது போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த லிங்கில் <>கிளிக்<<>> செய்து விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

News September 10, 2025

விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 9, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 9, 2025

விழுப்புரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 9) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News September 9, 2025

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய நபர் கைது

image

விழுப்புரம் அண்ணா நகர் பகுதியில் ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த சபாபதி என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 400 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!