India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செஞ்சி கோட்டையில், யுனெஸ்கோ பாரம்பரிய தொல்லியல் சின்னமாக அறிவிக்க, மத்திய தொல்லியல் துறையினர் முன்னிலையில், யுனெஸ்கோ பிரதிநிதி hwajong lee icomos ஆய்வு மேற்கொண்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு இடத்திலும் பார்வையிடுகிறார். நமது தமிழக அரசின் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், ரூ.39 கோடி மதிப்பீட்டில் ஆதி வாசிகளுக்கு 768 வீடுகள் அமைக்கப்படுகிறது. பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி மகா அபியான் திட்டத்தின் படி, விழுப்புரம் மாவட்டத்தில் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதன் அடிப்படையில், 2024-25 ம் ஆண்டு வரை விழுப்புரம் மாவட்டத்திற்கு, 768 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.5 லட்சத்து 9 ஆயிரம் வீதம், மொத்தம் 39 கோடி ஒதுக்கி உள்ளது.
செஞ்சியில் வரலாற்று சிறப்புமிக்க ராஜதேசிங்கு ஆண்ட செஞ்சி கோட்டை கம்பிரமாக இருந்து வருகிறது. அவ்வாறு புகழ்மிக்க செஞ்சிக்கோட்டையினை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக பதிவு செய்வதற்காக யுனெஸ்கோ குழுவினர் 27ஆம் தேதி செஞ்சிக்கோட்டைக்கு வருகை புரிந்து ஆய்வு செய்ய உள்ளனர். இதனால், அன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் செஞ்சிக்கோட்டையை பார்வையிட அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உலகப் பொதுமறையான நமது திருக்குறள் புகழ்பரப்ப விழுப்புரம் பொதுமறை தமிழ்ச்சங்கம் சார்பில், ‘பொதுமறை-100’ விழா, விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ஜெ ஜெ ஹாலில் (ஜெயந்தி மஹால்) செப்டம்பர் மாதம் 28 ந்தேதி சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக க.சித்ரா துணை இயக்குநர் (தமிழ் வளர்ச்சித்துறை விழுப்புரம்) அவர்களும், திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் அவர்களும் பங்கு பெற இருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரத்தை சேர்ந்த திலகவதி உடல்நலம் பாதிக்கப்பட்டு புதுவை எம்.வி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சைக்கு 4.2 லட்சம் செலுத்தியிருந்தும், 10 லட்சம் செலுத்தினால் தான் உடலை வழங்க முடியும் என மருத்துவமனை கூறியதாகவும், இது மருத்துவ அறங்களுக்கு எதிரானது என்றும் மருத்துவமனை நிர்வாகம் உடலை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமூகநீதிப் பேரவை நிர்வாகியும், பெரம்பலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்டவருமான சத்தியசீலனின் தந்தை பெருமாள் முத்துராஜ் இன்று உடல்நல குறைவால் காலமானார். அவரது செய்தியை அறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழையளவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் 6 மில்லி மீட்டர், கோலியனூர் 9 மில்லி மீட்டர், மரக்காணம் 29 மில்லி மீட்டர், வளவனூர் 10 மில்லி மீட்டர், கெடார் 10 மில்லி மீட்டர், அவலூர்பேட்டை 4 மில்லி மீட்டர், மணம்பூண்டி 12 மில்லி மீட்டர், முகையூர் 16 மில்லி மீட்டர், அனந்தபுரம் 3 மில்லி மீட்டர். சராசரியாக 5.87 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
பிரதமர் தேசிய காப்பீடு செய்வதற்கு, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் எண், அடங்கல் பசலி, சிட்டா ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம் என விழுப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள், வரும் நவ.15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனம் இந்தப் பணியை செய்கிறது என்றார்.
த.வெ.க. மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளில் கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மாநாடு நடைபெறும் நாள் அன்று போக்குவரத்திற்கு இடையூறுஏற்படுத்த கூடாது. வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். சாலையோரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்த கூடாது. கர்பினி பெண்கள், முதியவர்களுக்கு கட்டாயம் தடுப்புடன் கூடிய இருக்கை வசதிகள் வேண்டும்.
Sorry, no posts matched your criteria.