Villupuram

News September 29, 2024

விழுப்புரம் அமைச்சர் பதவி இழந்தார்

image

தமிழக அமைச்சரவையில் நேற்று பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News September 28, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (28.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 28, 2024

23 பேரை கைது செய்ய வேண்டும் – ராமதாஸ்

image

மேல்மலையனூர் விவசாயி தற்கொலை குறித்து இன்று ராமதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: தீக்குளித்து தற்கொலை செய்த மோகன்ராஜ் தனது தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளவாறு, தற்கொலைக்கு காரணமான 23 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மோகன்ராஜின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

News September 28, 2024

விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிக்கை

image

விழுப்புரம், திமுக பவளவிழா மற்றும் முப்பெரும் விழாவையொட்டி திமுக துணைபொதுச்செயலாளரும், உயர்க்கல்வி துறை அமைச்சருமான முனைவர் க.பொன்முடி அவர்கள் வரும் 30ம் தேதி திங்கட்கிழமை திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி
முகையூர் ( வடக்கு ) ஒன்றியம், மணம்பூண்டி ஒன்றியம் பகுதிகளில் திமுக கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி அறிக்கை விடுத்துள்ளார்.

News September 28, 2024

விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

image

ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் எனவும், எதிர் வழித்தடத்தில் புறப்பட வேண்டிய திருப்பதி – விழுப்புரம் விரைவு ரயில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு வந்தடையும் என திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News September 28, 2024

போதை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மொத்தம் 41 கடைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வோரு கடைகளுக்கும் ரூ 25,000 விதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வு தொடர்ந்து மாவட்டம் முழுக்க நடைபெற்றுக் கொண்டிருக்கும் என துறையை சார்ந்த அதிகரிக்க தகவல் தெரிவித்துள்ளனர்.

News September 28, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் தனி பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு மாவட்டத்தில் மூன்றாண்டு பணி நிறைவு செய்த 24 தனிப்பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆணையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணி புரிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக நியமிக்கப்பட உள்ளவர்கள் விரைவில் பணியமத்தப்படுவார்கள்.

News September 28, 2024

விழுப்புரம் வழியாக ராமநாதபுரம் சிறப்பு ரயில்

image

தாம்பரத்திலிருந்து, விழுப்புரம் வழியாக ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரயில், வாரம் மும்முறை இயக்கப்பட உள்ளது. திங்கள், வியாழன், மற்றும் சனி ஆகிய நாட்களில் தாம்பரம் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் இரவு 7 மணிக்கு வருகிறது. மறுநாள் காலை 5.55க்கு ராமநாதபுரம் சென்று அடையும். விழுப்புரம் மாவட்ட மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.

News September 28, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (27.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 27, 2024

மேல்மலையனூரில் தீ வைத்துக் கொண்ட நபர்

image

மேல்மலையனூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மோகன்ராஜ் என்பவர் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர், தற்போது தீ காயங்களுடன் திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனையில் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!