India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் C.Ve.சண்முகம் தலைமையில், அக்டோபர் 06-ஆம் தேதி ஞாயிற்று கிழமை, மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. மயிலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் R. விஜயன் முன்னிலையில், தீவனூர் GJ திருமண மண்டபத்தில், நடைபெற உள்ள இக்கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கிளைக் கழக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயி மோகன்ராஜ் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மோகன்ராஜின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் வளத்தி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மோகன்ராஜின் தற்கொலைக்கு காரணமான 19 பேர் மீது நேற்று வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தை விரைவாக முடிக்க கோரி, அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த கண்டமங்கலம் அதிமுக ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வானூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மு.சக்கரபாணி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.05 ஆம் தேதி அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
விழுப்புரம் வழியாக நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து தாம்பரம் வரை தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து அதிகாலை 05:35 க்கு புறப்பட்டு தாம்பரம் 12:45 சென்றடையும். மறு மார்க்கமாக மதியம் 03:45 புறப்பட்டு திருச்சிக்கு மறுநாள் அதிகாலை 12:30 சென்றடையும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) 1981 உரிம விதிகள் மற்றும் அரசாணையின்படி அக். 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் உருவாகி இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் 1801 ஆம் ஆண்டு கடலூரை தலைமையிடமாகக் கொண்டு தென்னார்க்காடு மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், 1993 ஆம் ஆண்டு விழுப்புரம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. நீர் வளமும், நிலவளமும், புகழ்பெற்ற சுற்றுலா தளங்களும், வரலாற்று தடயங்களும் நிறைந்த விழுப்புரத்திற்கு இன்று பிறந்தநாள். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் சத்தியமங்கலம் பகுதியில் பன்னீர்செல்வம் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் ஆக.7ஆம் தேதி வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஆட்சியர் பழனி உத்தரவின்படி, எஸ்.பி.தீபக் சிவாஜ் பரிந்துரையின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பன்னீர்செல்வத்தை கடலூர் மத்திய சிறையிலும், சீனிவாசனை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கௌதமசிகாமணி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் இன்று காலை மயிலம் அடுத்த விளங்கம்பாடி சாலையில் நடந்து சென்றவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து பைக்கில் சென்றவர்கள் மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரில் வந்தவர்கள் தப்பியோடிய நிலையில், இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.