India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை நாற்காலியில் அமர விடாமல் திமுகவினர் அவமரியாதை செய்யப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சமூகநீதி என்று பேசிக்கொண்டே சமூக அநீதியை இழைத்திடும் திமுக ஆட்சியின் அலங்கோலங்கள் நாள்தோறும் தொடர்கதையாகி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செஞ்சி அடுத்த ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு துணை ஊராட்சி மன்ற தலைவர் தன்னைத் தொடர்ந்து சாதிய வன்கொடுமை செய்வதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டார். இதனை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளத்தில் பட்டியலின மக்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் அவல நிலை திமுக ஆட்சியில் தொடர்கதையாகி வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு இரயில் வருகிற 6-ந் தேதியும், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வரும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் 7-ந் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஷேர் செய்யவும்
மகாத்மா காந்தி ஜெயந்தி நாளில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சேலம் மேற்கு பாமக மாவட்ட செயலாளரும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சதாசிவம் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மதுபான சில்லரை வணிக விதிகள் மற்றும் அரசாணையின்படி, காந்தி ஜெயந்தியன்று அனைத்து அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், தனியார் மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, காந்தி ஜெயந்தியையொட்டி இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக்கடைகள் இயங்காது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வரும் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 4:30 மணி முதல் 6 மணி வரை மாநாட்டுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பூமி பூஜைக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
கோவாவில் நடைபெற்ற உலக அளவிலான டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில், 7 நாடுகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். சொந்த ஊர் திரும்பிய அவர்களை, பொதுமக்கள் வரவேற்று வாழ்த்தினர். இப்போட்டிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் பாலகணேசன், ஜெகதீஸ்வரன், வேல்முருகன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்தனர்.
செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் நேற்று கள ஆய்வு செய்து பல்லவர் கால 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தவ்வைச் சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர். அது, மூத்ததேவி என அழைக்கப்படும் தவ்வை சிற்பம். இந்த சிற்பத்தை வடமொழியில் ஜேஷ்டா என அழைக்கின்றனர். திண்டின் மீது 2 கால்களையும் தொங்கவிட்ட நிலையில், வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரம் செல்வக்குடத்தின் மீதும் வைத்திருப்பது போன்று உள்ளது.
மயிலம், வெளியனூரை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி பாக்கியலட்சுமி கலியமூர்த்தி என்பவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். இதற்கு தடையாக இருந்த முருகனை கலியமூர்த்தி, சங்கர், பாக்கியலட்சுமி மூவரும் சேர்ந்து கொலை செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, கலியமூர்த்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம் – புதுச்சேரி மின்சார ரயிலும், புதுச்சேரி – விழுப்புரம் மின்சார ரயிலும் வருகின்ற அக்-7 மற்றும் 9-ஆம் தேதிகளில் முற்றிலுமாக ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் அக் 6-ஆம் தேதியும், திருவண்ணாமலை-விழுப்புரம் சிறப்பு ரயில் அக் 7-ஆம் தேதியும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.