Villupuram

News October 3, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன் பெற வழிவகை சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலஅலுவலகம் விழுப்புரம் அவர்களை 10.10.2024க்குள் அணுகி பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

News October 3, 2024

விடுமுறை அளிக்காத 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

காந்தி ஜெயந்தியையொட்டி, தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 114 நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், 64 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டதால், அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

News October 3, 2024

விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழைப்பொழிவு அளவு

image

விழுப்புரம் மாவட்டத்தின் மழைப்பொழிவு: விழுப்புரம் 53 மில்லி மீட்டர், கோலியனூர் 10 மில்லி மீட்டர், வளவனூர் 9 மில்லி மீட்டர், முண்டியம்பாக்கம் 23 மில்லி மீட்டர், நேமூர் 9 மில்லி மீட்டர், கஞ்சனூர் 5 மில்லி மீட்டர், செஞ்சி 3 மில்லி மீட்டர், செம்மேடு 23 மில்லி மீட்டர், வல்லம் 10 மில்லி மீட்டர், அனந்தபுரம் 20 மில்லி மீட்டர், மனம்பூண்டி 63 மில்லி மீட்டர் என சராசரியாக 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News October 3, 2024

விழுப்புரத்தில் கதர் விற்பனை இலக்கு 78 லட்சம்

image

தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு விற்பனை அங்காடியை நேற்று ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின்னர், கடந்த ஆண்டு கதர் விற்பனை இலக்கு 60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு 78 லட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டார். மேலும், கதர், பாலியஸ்டர், பட்டு புடவை ரகங்களுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது எனக் கூறினார்.

News October 3, 2024

தவெக மாநாட்டு பூமி பூஜையில் விஜய் பங்கேற்க வாய்ப்பு

image

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் வரும் 27ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறு உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாளை பந்தல் அமைக்கும் பணி தொடங்க இருப்பதால், காலை 4 மணி முதல் 6 மணி வரை பந்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது. இதில், புஸ்ஸி ஆனந்து கலந்து கொள்ள உள்ள நிலையில், நடிகர் விஜய்யும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 3, 2024

விழுப்புரம் வடக்கு மாவட்ட நாத.க. செயலாளர் விலகல்

image

விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் பொறுப்பில் இருந்து சுகுமாரன் விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கட்சியின் பல்வேறு பணிகளை தான் செய்து வந்ததாகவும், கட்சி போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் சிறப்பாக பணியாற்றியதாகவும் கூறியுள்ளார். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் தான் தோன்றித்தனமாக சீமானின் பேச்சு வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

News October 3, 2024

சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை: ஆணையர்

image

விழுப்புரம் நகராட்சிக்கு (2024-25) 2ஆம் அரையாண்டுக்கு சொத்து வரியை வரும் 31ஆம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும். சனிக்கிழமை உட்பட காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பழைய, புதிய நகராட்சி இடத்தில் கணினி வசூல் மையங்கள் செயல்படும். மேலும், tnurbanepay.tn.gov.in என்ற இணைய முகவரி மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் முத்துக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 3, 2024

விழுப்புரம் கடை வீதிகளில் கொலு பொம்மை விற்பனை

image

நவராத்திரி பண்டிகையையொட்டி, விழுப்புரம் கடை வீதிகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. உருவ பொம்மைகளான விநாயகர், விஷ்ணு, துர்க்கை, அம்மன், மீனாட்சி, முருகன், ஆஞ்சநேயர் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு கார்ட்டூன் பொம்மைகளும் பல வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். நீங்களும் உங்கள் வீட்டில் கொலு வைப்பீர்களா?

News October 3, 2024

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரும் அக்.5ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த நபர்கள் பங்குபெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 94990 55906, 90805 15682, 7010827725 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 3, 2024

300 சவரன் கொள்ளை: 2 பேர் கைது

image

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில், பாண்டித்துரை என்பவரின் நகை கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 8ஆம் தேதி நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 4 மாதங்களாக 5 தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் 7 பேரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த பழனி மற்றும் வேலாயுதம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!