Villupuram

News October 5, 2024

அரசு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீட்டில் வேலை

image

அரசு மருத்துவக் கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ மாணவராக சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களுக்கான சேர்க்கை ஆணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் +2 பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப்படிப்புக்கு இடம் வழங்கப்படுகிறது.

News October 5, 2024

திருச்சி தாம்பரம் சிறப்பு ரயில் விழுப்புரம் வழியாக

image

வண்டி எண்கள்: 06190 மற்றும் 06191 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் அதி விரைவாகவும், தாம்பரம் – திருச்சிராப்பள்ளி விரைவு வண்டியாகவும் இயங்கும் சிறப்பு ரயில். வரும் 11/10/2024 முதல் 31/12/2024 வரை, வாரந்தோறும் திங்கள், வியாழன் தவிர்த்து ஏனைய ஐந்து நாட்களில் செவ்வாய்,புதன்,வெள்ளி,சனி, ஞாயிற்று கிழமைகளில் இயங்கும். இது தஞ்சாவூர்
கும்பகோணம்,சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர்,
விழுப்புரம் வழியாக செல்லும்

News October 4, 2024

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில்

image

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) அக்.11ஆம் தேதி முதல் டிச.27ஆம் தேதி வரை (வெள்ளிதோறும்) இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு கொச்சுவேலிக்கு செல்லும். மறுமார்க்கமாக, அக்.13ஆம் தேதி முதல் டிச.29ஆம் தேதி வரை கொச்சுவேலி – தாம்பரம் (06036) சிறப்பு ரயில் ஞாயிறுதோறும் மதியம் 3:25க்கு புறப்பட்டு 4:50 க்கு சென்னை வந்தடையும். ஷேர் பண்ணுங்க

News October 4, 2024

பேருந்தில் வழி அனுப்பிவைத்த மாவட்ட ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்று வந்தன. இதில், வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டனர். அவர்களை, மாவட்ட ஆட்சியர் சி.பழனி, வழி அனுப்பி வைத்தார்.

News October 4, 2024

அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

image

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “விழுப்புரம் ஆனாங்கூரில் பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் சங்கீதாவை சிலர் இருக்கையில் அமரவிடாமலும், கோப்புகளில் கையொப்பமிட விடாமலும் தடுப்பதாகக் கூறப்படுகிறது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான அதிகாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.

News October 4, 2024

வல்லத்தில் சிப்காட் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டிவனம் சிப்காட்டில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த காலணிகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில், இளைஞர்கள் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செஞ்சி அடுத்த வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வரும் 6ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News October 4, 2024

ஆனாங்கூரில் சாதி பாகுபாடு இல்லை: ஆட்சியர் விளக்கம்

image

விழுப்புரம் மாவட்டம் ஆனங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா, நேற்று முன்தினம் (அக்.2) சாதிய பாகுபாடு இருப்பதாகக் கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பழனி ஆனாங்கூரில் சாதிய பாகுபாடு இன்றி சமத்துவத்துடன் ஊராட்சி நிர்வாகம் நடப்பதாக விளக்கம் அளித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News October 4, 2024

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், மணம்பூண்டியில் 6 சென்டி மீட்டர் மழையும், விழுப்புரம் நகரில் 5 சென்டி மீட்டர் மழையும், முண்டியம்பாக்கம், செம்மேடு, அனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், கோலியனூர், வல்லம், வளவனூர், நேமூர் ஆகிய இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 4, 2024

தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல்வேறு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது. எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் ஆட்சியரகத்திலுள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 3, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இசேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அரசு உத்தரவின்படி தற்காலிக பட்டாசு உரிமம் அரசு பொது இசேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!