Villupuram

News October 8, 2024

10,200 சதுர அடி பரப்பளவில் த.வெ.க. மாநாடு மேடை

image

விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநாடு மேடை, தமிழக அரசின் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் தலைமை செயலகம் வடிவில், 60 அடி அகலத்தில், 170 அடி நீளத்திற்கு 10,200 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. மேடையில் கட்சி தலைவர் விஜய் மற்றும் வி.ஐ.பி.,க்கள் தங்க, அனைத்து வசதிகளுடன் கூடிய தனித்தனி அறைகள் ஏற்படுத்தப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது.

News October 8, 2024

சுதந்திரமாக செயல்படலாம்: விழுப்புரம் கலெக்டர்

image

பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விழுப்புரம் கலெக்டர் கூறியுள்ளார். “சாதிய பாகுபாடுகள் இதுவரை ஏற்பட்டதில்லை. அப்படியிருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம். உங்களைச் செயல்படவிடாமல் தடுத்தாலும் தெரிவிக்கலாம். இதுவரை அப்படியொரு புகார்கள் வந்ததில்லை. யார் குறிப்பீடு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

News October 8, 2024

திண்டிவனத்தில் கார் மோதி விபத்து: ஒருவர் பலி

image

திண்டிவனம், வேம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவர், நேற்று முன்தினம் இரவு திண்டிவனம்-செஞ்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ரோஷணை போலீசார் கார் டிரைவர் ரமேஷை விசாரித்து வருகின்றனர்.

News October 8, 2024

மேல்மலையனூர் கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

image

மேல்மலையனூர் அடுத்த செவலபுரை பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (24). இவர், நேற்று முன்தினம் செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தென் புத்துப்பட்டு அருகே எதிர்பாராத விதமாக அவர் மீது கார் மோதியது. இதில், விஜய் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, ஆனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 8, 2024

விழுப்புரம் அருகே ரூ.2லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

image

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு லாரியில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது விசாரணையில் அவர்களது பெயர் ரமேஷ் அருள் என தெரிய வந்தது தொடர்ந்து அவர்களிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

News October 8, 2024

விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் பகுதியளவு ரத்து

image

விழுப்புரத்தில் இருந்து அக்டோபர் 9ம் தேதி காலை 6 மணிக்கு புறப்படவுள்ள மயிலாடுதுறை ரயில் விழுப்புரம் – திருத்துறையூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ரயில் திருத்துறையூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.19க்கு புறப்பட்டு மயிலாடுதுறை சென்றடையும், என ரயில்வே நிர்வாகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது.

News October 8, 2024

சிறுவர் பூங்காவை கலெக்டர் நேரில் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் புதிய டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு வருவதை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு தமிழக அரசின் அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்

News October 7, 2024

விழுப்புரம் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் பண்டிகை காலத்தில் ஆன்லைன் செயலி மூலம் குறைந்த விலை பொருட்கள், பரிசு கூப்பன் மற்றும் பரிசுகள் தருவதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். பணத்தை இழந்து வாடாதீர்கள். விழிப்போடு இருக்க வேண்டும், இவைகளை ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 7, 2024

சென்னை எழும்பூர் ரயில் புதுச்சேரி-முண்டியம்பாக்கம் இடையே ரத்து

image

புதுச்சேரியில் இருந்து அக்டோபர் 9 மற்றும் 11ம் தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்படவுள்ள சென்னை எழும்பூர் ரயில் (வண்டி எண் 16116) புதுச்சேரி – முண்டியம்பாக்கம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. எனவே ரயிலானது முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.40க்கு புறப்பட்டு சென்னை சென்றடையும், என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News October 7, 2024

விழுப்புரத்தில் இன்று 471 மனுக்கள் பெறப்பட்டன

image

மக்கள் குறைதீர் கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியவை கோரி 471 மனுக்கள் (மாற்றுத் திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்கள்: 26) வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

error: Content is protected !!