India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளியை முன்னிட்டு, தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இன்று (அக்.30) மாலை 5 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 3.45 மணிக்கு மானாமதுரை வந்து சேரும். மானாமதுரையில் இருந்து நாளை (அக்.31) காலை 11.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும். விழுப்புரம், கடலூர் வழியாக இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் இதர உதவித்தொகைபெறும் 61,69,691 பயனாளிகளுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிக்கைக்கு உரிய விலையில்லா வேட்டி, சேலை சம்மந்தப்பட்ட நியாயவிலைகடை மூலம் வழங்கப்படுகிறது. எனவே, பயனாளிகள் சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடை அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தில் பெற்றுகொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற 27ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகளில் மொத்தமாக 5 கோடியே 75 லட்சத்து 76 ஆயிரத்து 830 ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மாநாடு நடைபெற்ற அன்றைய தினம் மட்டும் 1 கோடியே 63 லட்சத்து 2 ஆயிரத்து 190 ரூபாய்க்கு மது கூடுதலாக விற்பனை ஆகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விழுப்புரம் மாவட்ட திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி இந்த தகவலை தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 29) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் இன்று மழை வருமா? கமெண்ட் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்டத்தில், கறவை மாடுகளின் உற்பத்தித்திறன் மற்றும் இனப்பெருக்கத் திறனை அதிகரிப்பதற்கு தேவைப்படும், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்காக, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் இந்தாண்டு தீவன அபிவிருத்தித் திட்டம் (2024-25), 3 நிலைகளில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்படுகின்ற வகையில், நீர் பாசன வசதியுள்ள நிலப்பகுதியில் தீவனப் பயிர் செயல்படுத்தப்பட உள்ளது. என விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு
தமிழக முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, விடுதலை சிறுத்தை கட்சிகள் ஆகிய அரசியல் கட்சிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி வெளியிட்டார்.
தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்.27ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான காலி வாட்டர் பாட்டில்கள், உணவு தட்டுகள், குப்பைகள் என சுமார் 5 டன் அளவுக்கான குப்பைகள் இருந்தது. மீதமான உணவுகளை சாலை ஓரத்தில் வீசியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
முதலமைச்சர் கோப்பையில் கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் இன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட திமுக ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.