Villupuram

News November 10, 2024

விழுப்புரத்தில் நவ.13 முதல் மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் நவ.13ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

விழுப்புரம்-திருச்சி விரைவு ரயில் பகுதி அளவு ரத்து

image

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம்-திருச்சி மேமு விரைவு ரயில் நவ-12 முதல் 21- வரை பொன்மலை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக ரயிலானது பொன்மலையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News November 10, 2024

திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்

image

விழுப்புரம் நகராட்சி உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், விழுப்புரம் நகராட்சி 18ஆவது வார்டு திமுக நிர்வாகி அரவிந்த் இல்ல திருமண வரவேற்பு விழாவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர், பொன்.கௌதமசிகாமணி இன்று (நவம்பர் 9) கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

News November 9, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 9, 2024

விழுப்புரம் மாவட்ட வேளாண்மை கணக்கெடுப்பு நிலை

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்ட அளவிலான வேளாண்மை கணக்கெடுப்பு நிலை II-க்கான கணினி வழி கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட புள்ளிவிவரத் துணை இயக்குநர் திரு.வீ.முத்துக்குமரன், கோட்டப் புள்ளிவிவரத் துணை இயக்குநர்கள் ப.அழகப்பன், செல்வராஜ் உட்பட பலர் உள்ளனர்.

News November 9, 2024

விழுப்புரத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் இன்று நடைபெற உள்ளது. இந்த முகாமின் மூலம் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் நியாய விலை கடை பொருட்கள் தொடர்பான புகார்கள் தொடர்பான மனுக்களை குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியரிடம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.

News November 9, 2024

விழுப்புரம் அருகே விபத்தில் மரணம் 

image

விழுப்புரம் சாலை அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் நேற்று தனது ஒன்றரை வயது பேரன் லட்சித்தை பைக்கில் அமர வைத்து சாலை அகரம் கெங்கையம்மன் கோவில் முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த சங்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். குழந்தை லட்சித் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 9, 2024

விழுப்புரம் அருகே விபத்து; நான்கு பேர் படுகாயம்

image

உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ், மனைவி பெரோஸ், தம்பி மகிமைடேவிட், தந்தை அந்தோணிசாமி ஆகிய 4 பேரும் நேற்று ஆட்டோவில் விழுப்புரம் சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பிரேக் போட்டதால் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தராஜிடம் விசாரித்து வருகின்றனர்.

News November 8, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (08.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 8, 2024

தொடர் மழையால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

image

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொந்தமாக சுமார் 3500 பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இப்பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தியானது, தொடர்ந்து அக்டோபர் மாதம் வரையில் நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தொடர்மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!