Villupuram

News October 14, 2024

விழுப்புரம் : அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்பொழுது வெளியிட்டுள்ள பதிவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில்
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் காவல் துறையினர் உள்ளனர்.
பொதுமக்கள் அவசர உதவிக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 9498181229 – தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

பாமக கூட்டங்கள் திசம்பர் மாதம் தள்ளிவைப்பு

image

திமுக அரசைக் கண்டித்து வரும் 17-ஆம் தேதி வடலூர், 20-ஆம் தேதி திண்டிவனம், 26-ஆம் தேதி சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்கள் திசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று பாமக தலைமை தெரிவித்துள்ளது.

News October 14, 2024

விழுப்புரம்: பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட பலர் இருந்தனர்.

News October 14, 2024

செஞ்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட டிராக்டர்கள்

image

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து ராட்சத மோட்டார் பொருந்திய டிராக்டர்களுடன் சென்னை நோக்கி விவசாயிகள் பயணம் கொண்டுள்ளனர். தாழ்வான இடங்களில் தீங்கும் மழை நீரை அகற்ற இந்த டிராக்டர்கள் பயன்படுத்தப்படும் என தகவல் தெரிய வந்துள்ளது.

News October 14, 2024

விழுப்புரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

image

விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை தெரிவிததுள்ளது.

News October 14, 2024

முன்னேற்பாடு பணிகள்- வனத்துறை அமைச்சர் ஆய்வு

image

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வெள்ள நீர் வெளியேற்றும் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் க. பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா. லட்சுமணன்,மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News October 14, 2024

பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும்

image

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது வரை பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

விழுப்புரத்துக்கு ரெட் அலர்ட்

image

வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அக்.15, 16 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட விழுப்புரம் மாவட்டங்களுக்கு அக்.16ம் தேதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மக்கள், மழையை எதிர்கொள்வதற்கு ஏதுவான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News October 14, 2024

கண்டாச்சிபுரம் அருகே வேடியப்பன் சிற்பம் கண்டுபிடிப்பு

image

கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் வனப்பகுதியில் உள்ள பாறை ஒன்றில் வேடியப்பன் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 15ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். முறுக்கிய மீசையுடன் வேடியப்பன் காட்சி தருகிறார். அவரது கரங்களில் வில், அம்பு இடம்பெற்றுள்ளன. பின்னணியில் பெரிய விலங்கு ஒன்று உள்ளது. வேடியப்பனின் வாகனமான குதிரையும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

News October 13, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களை, அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!