Villupuram

News October 15, 2024

பெட்ரோல் இஸ்திரி பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் சலவைத் தொழிலை மேற்கொள்ளும், (ரூ.1 லட்சம் வருமானத்திற்குட்பட்ட) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தினர், திரவ பெட்ரோலிய வாய்வு மூலம் இயங்கும் சலவை இஸ்திரி பெட்டிகளை பெற கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். ஷேர்பன்னுங்கா

News October 15, 2024

அவசரகால எண்கள் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம், பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா அழைப்பு எண் 1077, தொலைபேசி எண் 04146-223265, வாட்ஸ் அப் எண் 7200151144 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

விழுப்புரத்தில் பரவலாக மழை

image

தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, விழுப்புரம் நகரிலும், புகர நகர் பகுதிகளிலும் அதிகாலை முதல் மழை பரவலாக மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன், லேசான மழைத் தூறல் பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News October 15, 2024

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க, கட்டணமில்லா உதவி எண் 1077, தொலைபேசி எண் 04146-223265, வாட்ஸ் அப் எண் 7200151144 ஆகியவற்றை தொடர்பு கொண்டு மக்கள் புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

விழுப்புரம் மாட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, விழுப்புரம் நகரிலும், புகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன், அவ்வப்போது லேசான மழைத் தூறல் பெய்தது. ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

தவெக மாநாடு: மேலும் 5 கேள்விகள் எழுப்பிய காவல்துறை

image

விக்கிரவாண்டி வட்டம் வி.சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஏற்கனவே காவல்துறை தரப்பில் 21 கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது. அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைப்பில் பதிலளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

News October 15, 2024

துணை முதல்வர் ஆய்வு கூட்டம் ரத்து

image

விழுப்புரம் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 16, 17 தேதிகளில் வருவதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்த உள்ளதால் நிகழ்ச்சி ரத்தானதாக தகவல். மழைக்காலம் முடிந்தவுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

News October 14, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (14.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News October 14, 2024

BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரு தினங்களாக மழை பெய்து வருவதன் காரணமாகவும், நாளை அதிக கனமழை செய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (அக்டோபர் 15) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.

News October 14, 2024

விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதள பக்கத்தில் சற்று முன் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மழைக்காலம் என்பதால் ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி இருப்பதால் குழந்தைகள், சிறுவர்கள் நீர் நிலைகளில் விளையாட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இது முற்றிலும் ஆபத்தை விளைவிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.,

error: Content is protected !!