Villupuram

News October 16, 2024

உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் காணிமேடு To கந்தாடு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் வெள்ள நீர் வெளியேற்ற படுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட பொறுப்பாளர் Dr.ப.சேகர், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய பெருந்தலைவர், துணை பெருந்தலைவர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News October 16, 2024

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (15.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News October 16, 2024

விழுப்புரத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (16.10.24) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

News October 15, 2024

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

வானூர் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததாக, வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு மீதான விசாரணையில், 4 பேர் மட்டுமே ஆஜரான நிலையில், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் ஆஜராகவில்லை. இதனை அடுத்து, வழக்கை வருகின்ற நவ.6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார்.

News October 15, 2024

அவசரகால தொடர்பு அதிகாரிகள் மொபைல் எண்கள் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் மின் ஆபத்துகளை உடனுக்குடன் தொடர்பு கொண்டு தெரிவித்து சரி செய்து கொள்ள விழுப்புரம் 9445855738, கண்டமங்கலம் 9445855769, திண்டிவனம் 9445855835, செஞ்சி 9445855784 ஆகிய மின்வாரிய செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில் வாடகைக்கு கடைகள்

image

புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் அரசாணைப்படி சுழற்சி முறையில் தகுதி வாய்ந்த சுய உதவிக்குழுக்களுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் அருகில் உள்ள வட்டார திட்ட செயலாக்க அலகு மேலாளர் அல்லது மாவட்ட மகளிர் திட்ட அலகில் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

பூ மாலை வணிக வளாகம் மகளிர் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசின் அரசாணையை பின்பற்றி, சுழற்சி முறையில் பூ மாலை வணிக வளாக கடைகள் வாடகைக்கு வழங்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த குழுக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது தங்களுக்கு அருகில் உள்ள வட்டார திட்ட செயலாக்க அலகின் மேலாளர் அல்லது மாவட்ட மகளிர் திட்ட அலகில் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு, மாநில அளவிலான 22 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் கைப்பந்து போட்டிகள் அடுத்த மாதம் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை வேலூரில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள மாவட்ட அளவிலான வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான தேர்வு, வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வீரர்கள், வீராங்கனைகள் 1.1.2002க்குப் பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

மாவட்டத்தின் மழைப்பொழிவு விபரம்

image

விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழையளவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் 43 மில்லி மீட்டர், திண்டிவனம் 20 மில்லி மீட்டர், மரக்காணம் 37 மில்லி மீட்டர், செஞ்சி 20 மில்லி மீட்டர், வல்லம் 17 மில்லி மீட்டர், அவலூர்பேட்டை 20 மில்லி மீட்டர், மணமுண்டி 23 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 20 மில்லி மீட்டர், வளத்தி 20 மில்லி மீட்டர் என சராசரியாக 24.28 மில்லி மீட்டர் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

News October 15, 2024

குறை கேட்பு கூட்டத்தில் 394 மனுக்கள் பெறப்பட்டன

image

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகிய 394 பேர் மனுக்கள் பெறப்பட்டன.

error: Content is protected !!