India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள், கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். அப்போது,
விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
4 ஆண்டுகால திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படாத நிலையில், வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரத்தில் துணை முதல்வர் ஆய்வு ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார். “அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டு ரத்து செய்யபட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தினை ரத்து செய்தது தான் திமுக அரசின் சாதனை” என்றார்.
திண்டிவனம் அடுத்துள்ள பிரசித்திப் பெற்ற மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவருக்கு, கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உதவியாளர்கள் உடனிருந்தனர்.
மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார் நேற்று விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து தனது தொகுதிக்கு உட்பட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
திருவண்ணைநல்லூரில் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உருவ சிலையை துணை முதலமமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி ஆகியோர், துணை முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (05.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
நவ.8ஆம் தேதி விழுப்புரம் உள்ளிட்ட 9 தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.5) விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வெளியாகியுள்ளது. அதன்படி (மி.மீ.), அவலூர்பேட்டை -23, முகையூர்-11, மணம்பூண்டி-11, கெடார்-10, கஞ்சனூர்-3.3, அனந்தபுரம்-3, நேமூர்-1.8 என பதிவாகியுள்ளது.
விழுப்புரத்துக்கு இன்று மாலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நாளை காலை அரசு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். துணை முதல்வராக பதவி ஏற்று முதன் முறையாக விழுப்புரத்துக்கு வருகை தரும் அவருக்கு உற்சாக வரவற்பு அளிக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.