India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அளவிலான வாலிபால் போட்டிக்கு விழுப்புரம் மாவட்ட அணிக்கான வீரர் வீராங்கனைகள் தேர்வு வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி காலை 8 மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக வாலிபால் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் நபர்கள் 1.1.2002-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும் ஆதார் அட்டையுடன் போட்டித் தேர்வில் பங்கேற்கலாம் என மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் கௌதம சிகாமணி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மோகனவேல் என்பவர் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 8ஆவ்த் ஆசிய சேம்பியன்ஷிப் ‘பென்காக் சிலாட்’ போட்டியில் கலந்து கொண்டார். தனது முழு திறமையையும் வெளிப்படுத்திய அவர், 3ஆவது இடம் பிடித்ததது, வெண்கலப்பதக்கம் வென்று உள்ளார். இதனால், ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன. நீங்களும் பாராட்டலாமே
விழுப்புரம் மாவட்டம் மேல்தெரு அருகே அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருந்த இளைஞர் திடீரென அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இறந்தவர் பற்றிய விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று பலத்த மழை பெய்தது. விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூரைச் சேர்ந்த ராதா என்பவரின் ஓட்டு வீட்டின் கூரை, மழையால் நேற்று காலை இடிந்து விழுந்தது. பின்னர், அதேப்
பகுதியைச் சேர்ந்த ரத்னவேல் என்பவரது கூரை வீடும் இடிந்து விழுந்து சேதமானது. திருவெண்ணைநல்லுாரைச் சேர்ந்த அலமேலு என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மீட்புப் படையினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டுமென விழுப்புரம் எஸ்.பி.தீபக் சிவாச் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், மரக்காணம், அனைத்து காவல் நிலையங்களிலும் மீட்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீன கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தாழ்வா பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுங்கள்.
திண்டிவனம் சாலையைச் சேர்ந்தவர் சசி (22). கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய சசி, முதலில் ரூ.1,000 முதலீடு செய்து ரூ.1300 பெற்றுள்ளார். பின்னர், பல தவணைகளாக ரூ.6.24 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால், பணம் வரவில்லை. இதுகுறித்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலையில்லா இளைஞர்கள், தங்களது சுயவிவர குறிப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
TNPSC குரூப் 2, 2A MAINS தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் வகுப்பு, விழுப்புரம் நகரில் உள்ள வெராண்டா ரேஸ் அகாடமியில் வரும் அக்.20ஆம் தேதி காலை 10 மணியளவில், நடைபெற உள்ளது. இதில், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் குரூப் 2A வெற்றியாளர்கள் நேரில் வந்து கலந்துரையாடல் செய்து, குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு குறித்து மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்
மரக்காணம் & முருக்கேரி துணை மின் நிலையத்தில், இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் காலை 9 மணி – மாலை 4 மணி வரை மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஆ.புதுப்பாக்கம், அனுமந்தை, முருக்கேரி, கிலாப்பாக்கம், ராயநல்லூர், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், ஆவணிப்பூர், ஆட்சிப்பாக்கம், கருவம்பாக்கம் பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர்
Sorry, no posts matched your criteria.