India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டிவனத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் கால்வாய்கள் மற்றும் சிறு பாலங்கள் மேற்கொள்ளபடுகின்ற சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர், சார்ஆட்சியர் ,தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்கள் .மேலும் நகரமன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஆணையாளர், நகராட்சி அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி அளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது , இதில் 8வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பிடெக், நர்சிங், பார்மசி போன்ற கல்வி தகுதிஉடையவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை செயல்படுத்திட நாளை (அக்.18) அனைத்து கிராமங்களிலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் அனைத்துதுறை உயர் அலுவலர்கள் பல்வேறு கிராமங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுசேவைகள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்கிறார்.
திண்டிவனம் அருகே 13 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் வழியே பழகி, தனியே அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 பேர் கைது.தந்தையின்றி தாயின் வளர்ப்பில் உள்ள அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த முரளி (23), தனசேகர் (20), பிரகலாதன் (21), திருநாவுக்கரசு (21) ஆகிய நால்வரும் இன்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற்று, விவரங்களை பதிவு செய்யாமல் உள்ள விவசாயிகள், வட்டார வேளாண் அலுவலா்களை அணுகி பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 17)மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
Tnstc விழுப்புரம் மேலாண்மை இயக்குநர் அறிக்கை.’ஆயுதபூஜை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் விழுப்புரம்,கடலூர்,திருவண்ணாமலை,வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மண்டலங்களிலிருந்து அனைத்து பேருந்துகளையும் சிறப்பாக இயக்கி 14.10.2024 அன்று வருவாயாக ரூ.12.95 கோடிகள் ஈட்டியுள்ளது.மேற்கூறிய இந்த சாதனை புரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் தற்போது தெரிவித்துள்ளார். மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில் காலை முதலே பரவலாக வெயில் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், சேலம்,நாமக்கல், ஈரோடு,திரு ப்பூர், கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள, 46 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தலைவர்/ செயலாளர் மற்றும் மகளிர் சங்க தலைவர்/செயலாளர் பதவிக்கானவர்களை நேரில் ஆய்வு செய்து தேர்வு செய்து பரிந்துரை செய்து தயாரிக்கப்பட்ட பட்டியலினை இன்று மருத்துவர் ராமதாஸிடம் வழங்கினார்கள். உடன் வடிவேல் ராவணன் பொதுச் செயலாளர், திலகபாமா பொருளாளர் ஆகியோர்.
Sorry, no posts matched your criteria.