India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக இந்த <
பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையேயான மோதல், கட்சியில் அதிகாரப் போட்டி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான சர்ச்சைகளால் தீவிரமடைந்தது. இந்நிலையில், அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
பாமகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்து, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. இந்த அறிவிப்பு பாமகவினர் இடையே பெரும் அதிவரலையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வேளாண்மைத் துறையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் திரவ உயிர் உரங்கள் கிடைப்பதாக உதவி வேளாண்மை இயக்குநர் ஆர். செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதில் அசோஸ்பைரில்லம் (நெல், இதர பயிர்கள்), பாஸ்போ பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா மற்றும் ரைசோபியம் ஆகியவை அடங்கும். தேவைப்படும் விவசாயிகள் செஞ்சி வேளாண்மைத் துறை அலுவலகத்தை அணுகி இந்த உரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1. R.R.திருமண மண்டபம், கொல்லூர்
2. மகாலட்சுமி மண்டபம், பனமலைபேட்டை
3. ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகம், ஓமந்தூர்
4. அன்னை ரங்கநாயகி திருமண மண்டபம், அசோகபுரி
5. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், கொண்டங்கி
6. வள்ளி அண்ணாமலை திருமண மண்டபம், செஞ்சி
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் வரும் 30ம் தேதிக்குள் இந்த <
விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. உஷாராக இருங்கள். ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில், பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (செப்.11) காலை 9 – மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்நிறுத்தம் நடைபெற உள்ள பகுதிகள்:
▶️ கண்டமங்கலம்
▶️ வழுதாவூர்
▶️ பி.எஸ்.பாளையம்
▶️ நவமால்காப்பேரி
▶️ கலிங்கமலை
▶️ வெள்ளாழங்குப்பம்
▶️ கோண்டூர்
▶️ ஆழியூர்
▶️ பெரிய பாபுசமுத்திரம்
▶️ தாண்டவமூர்த்திகுப்பம்
▶️ பூசாரிப்பாளையம்
▶️ வி.பூதூர்
விழுப்புரம் கோலியனூரான் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் ராதா(40). விழுப்புரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவா் நேற்று காலை பள்ளிக்கு பணிக்கு சென்றபோது வழியில் மயங்கி கீழே விழுந்தார். பொதுமக்கள் மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
Sorry, no posts matched your criteria.