Villupuram

News November 1, 2025

விழுப்புரம்: தறிகெட்டு ஓடிய பைக்; இருவர் கைது!

image

விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் காவலர்கள் நேற்று அக்.31 வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பாச்சனூர் பகுதியை சேர்ந்த ராமு கானையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் தங்கள் பைக்கில் மக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவரது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News November 1, 2025

விழுப்புரம்: குட்கா விற்ற இருவர் கைது

image

திண்டிவனம் நேற்று அக்.31 மாலை, ரோஷணை பாட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள செந்தில்ராஜ், என்பவரின் பங்க் கடையில் சோதனை நடத்தினர். அவரது கடையில் 500க்கு மேற்பட்ட பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட அவரிடம் விசாரித்த போது, திண்டிவனத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, என்பவரிடமிருந்து குட்கா வாங்கியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

News November 1, 2025

71 ஆயிரம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்

image

தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 71 ஆயிரம் பயனாளிகள் வீடுகளுக்கு வரும் 3, 4, 5 ஆகிய தினங்களில் பொதுவிநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News November 1, 2025

விழுப்புரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்

News November 1, 2025

விழுப்புரம்: ஆட்சியர் வழங்கிய அறிவுரை

image

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் அப்துல் ரகுமான் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும் தீவிர திருத்த பணி தொடர்பாக பணிகள் நடைபெற உள்ளது இந்த நிலையில் அலுவலர்களுக்கு வாக்காளர்களை அலைகழிக்க கூடாது என ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேற்கண்ட பணிகள் வரும் நாலாம் தேதி முதல் அடுத்த மாதம் நாலாம் தேதி வரை நடைபெற உள்ளது.

News November 1, 2025

விழுப்புரம் : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

விழுப்புரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News November 1, 2025

விழுப்புரம் : தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

image

விழுப்புரம் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 1, 2025

விழுப்புரம்: கஞ்சா விற்று வாலிபர் கைது

image

விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டிவனம் போலீசார் சஞ்சீவி ராயப்பேட்டை ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது அவரை கைது செய்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News November 1, 2025

விழுப்புரம்: வீடு தேடி ரேஷன் – ஆட்சியர் தகவல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, நவ. 3, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் அவர்களது இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

News November 1, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அக்.31 இரவு முதல் நவ.1 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!