India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கல்லூரி மாணவி கவிநிஷா (19) நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர் சிபிராஜுடன் பைக்கில் சென்றபோது, இந்த விபத்தானது நடந்துள்ளது. படுகாயம் அடைந்த சிபிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரகண்டநல்லூர் பகுதியில் வசிக்கும் முரளி – நதியா தம்பதியரின் மகள் காவ்யாஸ்ரீ என்ற சிறுமி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி ‘ஆஸ்கார் உலக விருது’ பெற்றார். இவரின் இந்த சாதனைக்கு 3 சான்றிதழ்கள், 1 பதக்கம் மற்றும் 1 கோப்பை கிடைத்துள்ளது. இந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
திண்டிவனம் வட்டம் ரயில் உபயோகிப்பாளர் நல சங்கத்தின் சார்பில், ரயில் பயணிகளின் நலனுக்காக, கூடுதலாக ரயில்கள் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமாரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது உடனடியாக ரயில்வே துறைக்கு, எம்.பி ரவிக்குமார் பரிந்துரைத்து கடிதம் அனுப்பி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலராக பா.வெங்கடகுமார் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள துணைப் பதிவாளர் வெங்கடகுமாருக்கு வங்கி பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (22.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை-ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06103) வியாழன், சனி, திங்கள் கிழமைகளில் தாம்பரத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.55 மணிக்கு ராமநாதபுரம் செல்லும். மறு மார்க்கமாக ரயில் (06104) வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்கிழமைகளில் ராமநாதபுரத்தில் புறப்பட்டு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயில்கள் விழுப்புரம், கடலூர், சீர்காழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் (ஊட்டமிகு சிறுதானியங்கள்) குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சி.பழனி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உட்பட பலர் கலந்த கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்பு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 492 மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
புதுச்சேரி, பங்கூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காவலர் கருணாகரன். இவர், நேற்று முன்தினம் தனது மகன் வெற்றிவேலுடன் (3) விழுப்புரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கண்டமங்கலம் அருகே எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில், குழந்தை வெற்றிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுதொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ளர் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஊரணிதாங்கள் அருகே, நேற்று நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த சலீம்பேகம், முகமது அலி, முகமது பாஷா, நஸ்ரீன்பேகம், ஆயிஷா பிபி, நசீமா பீ ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் தொரபாக, செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.