Villupuram

News October 25, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (24.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 24, 2024

நாளை அனைத்து பள்ளிகளிலும் SMC கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான அரசு பள்ளிகளிலும் நாளை பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் கட்டாயம் நடைபெற வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெற்று, நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், கூட்டத்திற்கு வருகை தரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டையை தயார் செய்து வழங்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

விழுப்புரத்தில் அக்.29ஆம் தேதி வரை மழை

image

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த டானா புயல், நாளை (அக்.25) காலை ஒடிசா, மேற்குவங்கம் இடையே புரி- சாகர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று (அக்.24) விழுப்புரத்தில் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அக்.29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ள

News October 24, 2024

விக்கிரவாண்டி மாநாடு பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார்

image

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பாதுகாப்பு பணியில் 5,500 போலீசாரை ஈடுபடுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில், 2 டி.ஐ.ஜி., 10 காவல் கண்காணிப்பாளர், 20 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 50 டி.எஸ்.பி., 200 ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 24, 2024

சி.வி.சண்முகம் மீதான வழக்கு நவ.25ஆம் தேதி ஒத்திவைப்பு

image

கடந்த 2023ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், சி.வி.சண்முகம் நேரில் ஆஜரானார். அவர் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து விசாரணையை நவ.25ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News October 24, 2024

கைபேசி கோபுரங்களில் மின்கலன் திருடிய 5 பேர் கைது

image

செல்போன் கோபுரங்களில் மின்கலன்கள் திருடியது தொடர்பாக, திருவெண்ணைநல்லூர், வளவனூர், கிளியனூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய, விழுப்புரம் குபேரன் சிட்டி மாலிக், மகாத்மா காந்தி சாலை சௌத்ரி, திண்டிவனம் கோபாலபுரம் நௌசாத் சையிப், வேலூர் சையத் ஜாபர், யாமின் சையிப் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 24, 2024

4,08,636 பனை விதை நட்டு விழுப்புரம் முதலிடம்

image

தமிழகத்தில், 1 கோடி பனை விதைகள் நடும் திட்டத்தில், இதுவரை 1,068 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 4,08,636 பனை விதைகள் நட்டு விழுப்புரம் மாவட்டம் முதல் இடத்தையும், 3,094 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 3,77,581 பனை விதைகள் நட்டு நாமக்கல் மாவட்டம் இரண்டாமிடத்தையும், 828 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 32,713 பனை விதைகள் நட்டு செங்கல்பட்டு மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 24, 2024

உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி எம்.பி. கடிதம்

image

மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு விசிக பொதுச் செயலரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான து.ரவிக்குமார் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்து?

News October 24, 2024

சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்ச்சி

image

மயிலம் அடுத்த ரெட்டணையில் உள்ள ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள், நாமக்கலில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி பரிசு பெற்றனர். அவர்களுக்கு, பள்ளி நிறுவனர் பழனியப்பன், முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் எரோமியாஸ் பிஸ்கோ, சிலம்ப ஆசிரியர் அபிமன்யு ஆகியோர் நேற்று (அக்.23) பரிசு வழங்கி பாராட்டினர்.

News October 24, 2024

தவெக. மாநாட்டிற்காக வழக்கறிஞர்கள் நியமனம்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் கட்சித் தொண்டர்களுக்கு, சட்ட ரீதியாக உதவிடும் வகையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டுப் பணிகள் முழுவீச்ல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!