India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டை சேர்ந்தவர்கள் பரசுராமன்-தமிழ்செல்வி தம்பதியின் மூத்த மகன் சிவபாலன்,17; இவர் முட்டத்துார், பள்ளியில் +2 படிக்கிறார். இவரது தங்கை கனிஷ்கா,10;மற்றொரு தங்கை தீக்க்ஷா ,7; மூவரும் இந்தாண்டு நடந்த மாவட்ட, மாநில சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து, சாதனை படைத்துள்ளனர். மூவரையும் கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் சர்வதேச இளைஞர் தின விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின், பேசுகையில் கல்லுாரிகளில் செயல்பட்டு வரும் செஞ்சுருள் சங்க மாணவர்கள் மூலம், பால்வினைய், காசநோய் மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டம் நடந்ததாக கூறினார்
விழுப்புரம் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் படி, அக்கட்சிக்கு எதிராக செயல்பட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அவர் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கும் அன்புமணி எந்த பதிலும் அளிக்காததால், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாகவே கருதப்பட்டு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து அன்புமணி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்தார். இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பானது வழங்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே எட்டு மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அன்புமணி “உரிமை மீட்க… தலைமுறை காக்க'” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு போட்டியாக, ராமதாஸ் “கிராமங்களை நோக்கி” என்ற பயணத்தை செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தில் நேற்று தொடங்கினார். இதனால் கட்சிக்குள் பிளவு மேலும் வலுப்பெறுவதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்தில் நேற்று இரவு பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை செய்த பாலாஜி, அருண்பிரகாஷ், ராஜேஷ், சேட்டு உள்ளிட்ட ரவுடிகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி, ஸ்ரீ ரங்கபூபதி இன்ஜினியரிங் கல்லூரியில் வரும் செப்.13 சனிக்கிழமை காலை நலம் காக்கும் ஸ்டாலின் மாபெரும் உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை கொண்டு வரவும்.
வானுார் வட்டம் கேணிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே, திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடை எதிரே டிரான்ஸ்பார்மர் ஒன்று, உயர் மின்னழுத்தம் காரணமாக நேற்று(செப்.10) திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், நாகராஜன் மீது கொதிக்கும் ஆயில் தெறித்து படுகாயம் அடைந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.