Villupuram

News April 10, 2025

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற 10ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை படித்த இளைஞர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மே 31க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

 இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.44 கோடி இழப்பீடு

image

காஞ்சிபுரத்தை சேர்ந்த இஞ்சினியர் மோகன்குமார் 1.7.2023 அன்று விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே பைக்கில் சென்றபோது, லாரி மோதி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை சேவகன், தாய் சாந்தி மற்றும் சகோதரர்கள் கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், மோகன் குமார் குடும்பத்திற்கு ரூ.1.44 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

News April 10, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(09.04.2025) இரவு 10.00மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கொட்ட பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்கள் அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லது 100ஐ டயல் செய்யலாம்.

News April 9, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 9, 2025

புவிசார் குறியீடு பெற காத்திருக்கும் விழுப்புரம்

image

விழுப்புரத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இல்லை எனினும், தனித்துவமான செஞ்சி பொன்னி, விழுப்புரம் தர்பூசணி, திண்டிவனம் பனிப்பயறு போன்ற பொருட்கள் புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றன. குறியீடு கிடைக்கும் பட்சத்தில் இந்த பொருட்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு புவிசார் குறியீடு பொருட்கள் பட்டியலில் விழுப்புரமும் இடம் பெறும். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

விழுப்புரத்தில் 194 காவலர்கள் அதிரடி பணியிடமாற்றம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிரடியாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 194 காவலர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி சரவணன் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

நர்சிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

image

 விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பாராமெடிக்கல்/மெடிக்கல்/நர்சிங்// டிகிரி முடித்தவர்களுக்கு வரும் 11/4/2025 வெள்ளிக்கிழமை அன்று 150 க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில்  அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

News April 9, 2025

குவாலிட்டி செக்கர் பணி வேலைவாய்ப்பு

image

விழுப்புரத்தில் உள்ள ரானே சுப்ளையர்ஸ் நிறுவனத்தில் குவாலிட்டி செக்கர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 18-25 வயதுக்குட்பட்டவர்கள் SSLC கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். இப்பணிக்கு 20 காலி பணியிடங்கள் உள்ளன. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 9, 2025

விழுப்புரத்தில் தமிழில் பெயர் பலகை கட்டாயம்

image

விழுப்புரத்தில் இயங்கும் அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகளில் தமிழ் பெயர் பலகைகள் மே 15ஆம் தேதிக்குள் அமைத்திட வேண்டுமென ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

News April 9, 2025

மரத்தில் பைக் மோதி விபத்து: கல்லூரி மாணவர் பலி

image

வளவனூர் அருகே தாதாம்பாளையம்,சோ்ந்த தமிழரசன் (20). அதே பகுதியை சேர்ந்த செல்வம் (21), இருவரும் நண்பா்கள். இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். பைக் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!