India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிப்.19-ஆம் தேதி ஆட்சியரககுறைதீர் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் துறை அலுவலர்கள் பங்கேற்று, தத்தமது துறையிலுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து தெரிவிக்கவுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கி.மணிகண்டன் இவரது மனைவி உமா மணிகண்டனுக்கும் உமாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த உமாவின் தலையில் குழவிக் கல்லால் மணிகண்டன் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த உமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (15.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக பொறுபேற்றிருக்கும் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கு செஞ்சி கூட்ரோட்டில் இன்று (பிப்.15) மாலை 05.00 மணி அளவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என செஞ்சி ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை மருந்து கடையில் மருந்து வாங்கிக் கொண்டு சாலையை கடக்கும் போது புதுச்சேரியில் இருந்து வந்த அரசு பேருந்து மோதி 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்ட ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவரும் நேரில் ஆஜராகினர். அமைச்சர் உள்ளிட்ட நான்கு பேர் ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை வரும் மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூராக பேசியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணைக்கு சி.வி சண்முகம் ஆஜராகவில்லை. அவர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர். இதையடுத்து, வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த திகம்பர சாமிகளின் தலைமையகம் திண்டிவனத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேல் சித்தாமூரில் உள்ளது. இங்குள்ள 2 சமணக் கோயில்கள் ஒன்றில் பர்சவானந்தரும், மற்றொன்றில் மயிலானந்தரும் வீற்றுள்ளனர். மயிலானந்தரில் பெரிய கற்பாறையில் பஹீபாலி, பர்சவானந்தர், ஆதிநாதர், மஹாவீரர், அம்பிகா யஷீ ஆகிய சிற்பங்கள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண ஆலயங்கள் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.
பெஞ்சால் புயல் காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடுசெய்யும் விதமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 15.02.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வியாழக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை தலைமை ஆசியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வழுதரெட்டிப் பகுதியில் பல்லவர் காலத்து முருகன் சிற்பம் கண்டறியப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் உத்தரவின்பேரில் இன்று கடலூர் அருங்காட்சியகம் காப்பாட்சியர் ஜெயவர்த்தனா வருகை தந்து முருகன் சிற்பத்தை நேரில் பார்வையிட்டு அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.