India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி முதலிய பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு, விழுப்புரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டம் முகையூர் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்கவில்லை என அமைச்சரிடம் முறையிட்டனர். அப்போது, அங்குள்ள அதிகாரிகளிடம் “ஏன் இன்னும் பட்டா வழங்கவில்லை” எனகே கேட்டு கண்டித்தார். பின், “முதல்வர் வருகைக்கும் பட்டா வழங்குங்கள் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி , மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி ஆகியோர் தலைமையில் இன்று (16.11.2024) காலை 11.00 மணிக்கு விழுப்புரம் கரும்பு திருமணம் மண்டபத்தில் (காட்பாடி மேம்பாலம் அருகில்) கூட்டுறவுத் துறை சார்பில் 71 – வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா – 2024 நடைபெறுகிறது. விழாவில் கூட்டுறவு வளர்ச்சி பற்றி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
விழுப்புரம் கோட்ட அளவில், நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் எதிர்வரும் 19.11.2024 அன்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் விக்கிரவாண்டி, வானூர், மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களை சார்ந்த விவசாயிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் வருகின்ற (16.11.2024) சனிக்கிழமையன்று நடைபெறுகின்ற காரணத்தினால் அன்று நடைபெறுவதாக இருந்த விழுப்புரம் மற்றும் திருவெண்ணைநல்லூர் துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்படுகிறது. எனவே இந்த மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்தடை இருக்காது மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறந்த 3 பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளுக்கான கேடயத்தை பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாவிடம் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வருகை தர உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு மண்டபம் மற்றும் அணைக்கட்டு ஆகியவற்றை முதல்வர் திறக்க உள்ளதாகவும், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி சிலை திறப்பு விழாவிழும் பங்கேற்பார் என பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான யானைத் தந்தத்தாலான 4 பொம்மைகள் நேற்று சிக்கியுள்ளன. புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தாங்கும் விடுதியில் யானை பொம்மைகளை பேரம் பேசி விற்கும்போது பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரை வனத்துறையினர் பிடித்து, யானை தந்தம் எப்படி வந்தது? யார் மூலம் வாங்கப்பட்டது? இதிலோ யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகையூர் ஊராட்சி ரயில்வே நகர் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” 2ஆம் கட்டம் துவக்க விழா (நவ 15) நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.