Villupuram

News February 19, 2025

விழுப்புரத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞருக்கு விருது

image

சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு தமிழக அரசால் வாழும் கைவினை பொக்கிஷம் என்ற விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2023-24 ஆம் ஆண்டிற்கான இந்த விருதை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுடுகளிமண் சிற்பக் கலைஞர் பலராமன் உள்ளிட்ட 9 பேருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். விருது பெரும் கலைஞர்களுக்கு 8 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News February 19, 2025

இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளி மீட்பு

image

மரக்காணம் அருகிலுள்ள கந்தாடு கிராமத்தில் கோழி இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளர் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த கடையிலிருந்து குழந்தைத் தொழிலாளர் மீட்கப்பட்டு மாவட்டக் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டார். சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 61 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

News February 18, 2025

498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவு

image

ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News February 18, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (18.02.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 18, 2025

பாலியல் குற்றச்செயல்களுக்கு கஞ்சாவே காரணம் – அன்புமணி

image

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் தான் காரணம். அதன் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை என்று கூறியுள்ளார்.

News February 18, 2025

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விளக்க கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்திவைத்துறை சார்பில், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” DRUG FREE IN செயலியின் (Mobile APT) பயன்பாடு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுடனான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று  நடைபெற்றது.

News February 18, 2025

பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

image

மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

News February 18, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தேதி அறிவிப்பு 

image

விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் வரும் 20ம் தேதியில் காலை 11 மணிக்கு விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர்,திருவெண்ணெய்நல்லுார் கண்டாச்சிபுரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்குகிறார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 21ம் தேதி, பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

பாலத்திலிருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு

image

திண்டிவனம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (29) சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், நேற்று முன்தினம் மது போதையில் திண்டிவனத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகேயுள்ள வாய்க்கால் பாலத்தின் தடுப்புக் கட்டை மீது அமர்ந்திருந்த போது தவறி விழுந்ததில் பாலாஜிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தாா். திண்டிவனம் போலீஸாா்  விசாரணை நடத்திற் வருகின்றனர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!