India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள துணை முதல்வர் இன்று விழுப்புரம் மாவட்டத்தின் ஆட்சியரகத்தில் மேற்கொண்டார். அப்போது, அரசு சான்று திட்டங்களைப் பற்றியும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார். மேலும் முதல்வரின் முகவரித் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகளைப் பற்றியும் சம்பந்தப்பட்ட மக்களிடம் கேட்டறிந்தார். முடிவு பெறாத கோப்புகளை முடிக்க சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரத்தில் இன்று திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்ல வேண்டும் என்ற முதல்வர் இலக்கை மனதில் ஏந்தி அயராது உழைத்திட வேண்டும். மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், கிளை என கட்சி அமைப்புகளும், 23 சார்பு அணிகளும் அயராது பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மக்கள் வளர்ச்சி பணிகள் குறித்தும், முடிவுற்ற பணிகள் குறித்தும், முடிவு பெறாத பணிகள் குறித்தும் முழுமையாக கேட்டு அறியப்பட்டது. மாவட்டத்தில் முழுமை பெறாத பணிகளுக்கு கால அவகாசம் அளித்துள்ளேன். அப்பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என்று துணை முதல்வர் பேட்டி அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மஞ்சக்கொல்லை பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம்’ என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா? உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.30க்கு புறப்படும் ரயில், விழுப்புரம், திருச்சி மதுரை, விருதுநகர் வழியாக நாளை காலை 8.30க்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக, அதேநாள் இரவு 10.15க்கு திருச்செந்தூரில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக பயணித்து, 8ஆம் தேதி காலை 10.30க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
விழுப்புரத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள், கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். அப்போது,
விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
4 ஆண்டுகால திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படாத நிலையில், வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரத்தில் துணை முதல்வர் ஆய்வு ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார். “அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டு ரத்து செய்யபட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தினை ரத்து செய்தது தான் திமுக அரசின் சாதனை” என்றார்.
திண்டிவனம் அடுத்துள்ள பிரசித்திப் பெற்ற மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவருக்கு, கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உதவியாளர்கள் உடனிருந்தனர்.
மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார் நேற்று விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து தனது தொகுதிக்கு உட்பட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
Sorry, no posts matched your criteria.