India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரத்தில் நேற்று ஒரே நாளில் நாளில் 300 நெகிழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நகராட்சி சார்பில், வணிகர்களுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2024 அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான பிரகாஷ் தமிழரசன், ஜெமினி, மூன்று நரிக்குற இளைஞர்களை கைது செய்து அவரிடம் இருந்த மூன்று நாட்டு துப்பாக்கி, 28 நாட்டு வெடிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், எட்டு கத்திகள், இரண்டு கிலோ ஒயர்கள், வனவிலங்குகளுக்கு தரப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி அருகே உள்ள பாப்பனப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராகுல், மணிகண்டன், விஷ்வா மூவரும், நேற்று ஒரே பைக்கில் அழுக்கு பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராகுல் உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, விழுப்புரம் வழியாக சபரிமலை செல்வதற்காக கொல்லம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16101) ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது, தினசரி இரவு 7.20 மணிக்கு விழுப்புரத்திற்கு வருகிறது. மறுநாள் காலை 6 மணிக்கு புனலூர் வழியாக கொல்லம் செல்கிறது. புனலூரில் இருந்து சபரிமலை செல்வதற்கு ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஐயப்ப பக்தர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
விழுப்புரத்தில் இன்று (நவ.20) முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கிளப்பாக்கம், கீழ்சிவிரி, ஆவணிபூர், அச்சிப்பாக்கம், கருவைப்பாக்கம், ஆண்டப்பட்டு. மரக்காணம், ஆச்சிக்காடு, குட்டுகாடு, திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்ப்பேட்டை, அனுமந்தை ஆகிய சுற்றுப்புற பகுதிகளில் (9AM – 2PM) மின்தடை ஏற்படும். SHARE
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2024 அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எல்லிஸ் சத்திரம் சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசு அலுவலர்களின் வாகனம் நிறுத்துவதற்கான இடம் சீர் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனிஇன்று (19.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உட்பட பலர் உள்ளனர்.
கடலூர் தெற்கு மாவட்டத்தில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பி.பி. கே சித்தார்த்தன் அவர்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளராக மாநில தலைவர் செல்வப் பெருந்தகையால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு அவரின் பணி சிறக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்தி வணங்கினார்கள்.
Sorry, no posts matched your criteria.