Villupuram

News September 4, 2025

விழுப்புரம்: குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்கள் ஊரில் நடைபெற்று வரும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் விண்ணப்பிக்காலாம். ஷேர் IT <<17608117>>தொடர்ச்சி<<>>

News September 4, 2025

BREAKING: விழுப்புரம் அருகே விபத்து.. 10 பேர் காயம்

image

விழுப்புரம் அருகே இன்று காலை 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெஞ்சிசாலையில் விதை பண்ணை என்ற இடத்தில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் மற்றும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News September 4, 2025

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

விழுப்புரத்தை சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடா், பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக பொருளாதார, கல்வி நிலை, வாழ்க்கைத்தரத்தை உயா்த்துவதற்கு பங்காற்றியவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா்,பழங்குடியினா் நல அலுவலத்தில் அக்.10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

News September 4, 2025

விழுப்புரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு<<>> கிளிக் செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

விழுப்புரம் மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று (செப்.03) நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பித்தனர். சமர்ப்பித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்தார்

News September 3, 2025

விழுப்புரம்: திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

image

திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊழியரை திமுக கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக, திமுக கவுன்சிலர் ரம்யா மற்றும் நகரமன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News September 3, 2025

அன்புமணி நீக்கம் – ஆதரவாளார்கள் அதிர்ச்சி

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக-வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமதாஸ் தலைமையில் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், ராமதாஸ் படங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அன்புமணியின் படம் நீக்கப்பட்டதன் மூலம் ராமதாஸ்-அன்புமணி இடையிலான அரசியல் பிளவை வெளிப்படுத்துகிறது.

News September 3, 2025

மின்கம்பியில் சிக்கி விவசாயியின் காளைகள் பலி

image

விழுப்புரம் மாவட்டம் பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் இன்று (செப்.3) காலை ஏற்பூட்டி உழுவதற்காக இரண்டு காளைகளுடன் கூலிக்கு மற்றொருவரின் வயலுக்கு சென்றார். அப்போது வயலில் மின்சார கம்பம் இருந்தது. அதில் இருந்து கம்பி நீரில் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் உழுதபோது, கம்பி மாட்டின் காலில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி இரு காளைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

News September 3, 2025

மிலாடி நபி முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (செப்.5) மிலாடி நபி விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். மீறி கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!